About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 13 ஜூலை, 2023

அடிமுடி சித்தர்

அடி அண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிமுடி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அரிய மூலிகை மருத்துவத்தால் பக்தர்களின் நோயை குணமாக்கியவர். நவகண்ட யோகம் செய்தவர். கல்லைத் தொட்டுத் தந்தால் தங்கமாகும், காய்ந்த இலையைத் தந்தால் திருநீறாக மாறும். இந்த அடிமுடி சித்தர்தான் முதன்முதலில் கிரிவலப் பாதையை ஏற்படுத்தினார்.

இவருடைய குரு கௌதம முனிவர். இவர் கிரிவலப் பாதையை ஏற்படுத்தும்போது அங்கே வழியில் அகலாமல் இருந்த பெரிய கனமான பாறை ஒன்றைத் தன் ஜடாமுடியால் கட்டி இழுத்து ஓரமாகப் போட்டாராம். இன்றும் கௌதம நதி இவ்வூருக்கு அருகாமையில் ஓடுகிறது. மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் அங்கு நடக்கும். அதை நம்முடைய பழைய பதிவில் விரிவாகப் பார்த்துள்ளோம்.

பறக்கும் பெண் சித்தர் அனந்தாம்பாள் (எ) ஸ்ரீசக்கரம் (எ) சக்கரை அம்மாவுக்கு உபதேசம் தந்த குருதான் அடிமுடியார். இவர் சர்வ சாதாரணமாகப் பல அற்புதமான சித்துகளை நிகழ்த்தியவர்.

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா...     (கந்த குரு கவசம், பா.45)

-எஸ்.சந்திரசேகர்





1 கருத்து: