About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

போற்றத்தக்கவர்கள்! 🙏🙏

அசைவர்களுக்கே இது தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் என்ன சொல்ல? சில அண்டை வீடுகளில் மீன் கோழி ஆடு மாடு குடல் சமைக்கும்போது ஜன்னல் கதவு எல்லாவற்றையும் திறந்து வைத்து டார்ச்சர் செய்வார்கள். அவர்களாலேயே தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு துர்நாற்றம் பரவும். ஏதோ நம்மைப் பாழும் நரகத்தில் தள்ளியது போன்ற பிரமை ஏற்படும். 🤔

சுத்தம் செய்து நீரில் கழுவியும், மணம் வீசும் புதினா இஞ்சு பூண்டு மசாலா எல்லாம் அரைத்துப் போட்டும் இவ்வளவு துர்நாற்றம் வீசும் என்றால்... அந்தப் பதார்த்தத்தைச் சகித்துக்கொண்டு ரசித்து ருசித்து உண்ண முடியும் என்றால் அவர்கள் ஞானியரே என்று அவ்வப்போது மனம் சொல்லும். அவர்கள் அளவுக்கு நமக்குப் பக்குவமும் முதிர்ச்சியும் போதவில்லையோ என்று நினைப்பேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக