About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

அபச்சாரம்! 😂

திரு.சாலமன் பாப்பையா, திரு. சிம்சன் ராஜா (எ) பட்டிமன்றம் ராஜா, ஆகியோர் எதைப் பேசினாலும் இனி அது வம்பாகத் திரித்து விடப்படும். 



விருந்தோம்பலில் செட்டிநாட்டு ஸ்பெஷல் சமைத்துப்போட்டு ருசியாகவே இருந்தாலும் "செட்டிநாடா?" என்று இவர்கள் வாய் திறந்து கேட்கக்கூடாது. செட்டியார் என்று புரிந்து கொள்ளப்படும்.

உங்களில் "முதலில் யார் வந்தது?" என்று தப்பித் தவறியும் கேட்கக்கூடாது. முதலியார் என்று காதில் விழும்.

வெளிநாட்டில் செட்டில் ஆகியும்கூட உங்க "பிள்ளை சைவம்" என்பது நல்ல விஷயம் என்று பாராட்டினால் அது குற்றம். ஓஹோ.. சைவப்பிள்ளைனு சூசகமாக சொல்கிறார்.

இத்தனை காலம் பட்டாளத்துல இருந்ததுக்கு 'நாயக்'ரா ஆனதே பெரிய விஷயம் என்று பேசக்கூடாது. ஐய்யோ... கிண்டல் செய்கிற அளவுக்கு நாயக்கர் சாதி கேவலமா?

காலம் போகிற போக்கில் எல்லாமே தப்பும் தவறுமாகத்தான் பார்க்கப்படும். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றால் என்ன சொல்ல?

இத்தனை காலம் 'நாயக்'ரா பட்டாளத்துல வேலைல இருந்ததே பெரிய விஷயம் என்று பேசக்கூடாது. ஐய்யோ... கிண்டல் செய்கிற அளவுக்கு நாயக்கர் சாதி கேவலமா?

காலம் போகிற போக்கில் எல்லாமே தப்பும் தவறுமாகத்தான் பார்க்கப்படும். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றால் என்ன சொல்ல?

அப்படியே 'என்ன சாதி' என்று கேட்டால்தான் என்ன? ஒரு தவறுமில்லை! ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொல் பாரம்பரியம் உண்டு. அவர்களிடம் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பம்சம் இருக்கும். சாதியைப் பார்த்துத்தான் இவங்கெல்லாம் பழகுவாங்க போலிருக்கு என்று நம்முடைய சமுதாயத்தில் எப்போதுமே ஒரு பொதுவான கருத்து உண்டு. அவரவர் தனிப்பட்ட கடந்தகால அனுபவத்தைப் பொறுத்தே கேள்விகளின் நோக்கமும் புரிந்து கொள்வதும்  நிலைக்கும். கேட்டாலே குற்றம் என்றால் அது காணும் விகல்பமான பார்வையில்தான் உள்ளது..

-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக