About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 29 நவம்பர், 2017

நகர்ச்சி விதிகள் - Laws of motion

இரண்டாம் நூற்றாண்டில் ரிஷி கானட், தன்னுடைய ‘வைசேஷிக சூத்திரம்’ என்ற நூலில் கீழ்கண்ட சூத்திரங்களை 'பொருளின் நகர்வு சார்ந்த விதிகளை' கூறியுள்ளார். இதை Laws of motion என்ற தலைப்பில் ஐசக் நியூட்டன் அப்படியே தனதாக்கிக் கொண்டதாக மேன்செஸ்டர் பல்கலைக் கழகம் கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் இவ்விதியை 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய ‘பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா’ என்னும் நூலில் அப்படியே காப்பியடித்து எழுதியுள்ளார். ஆனால் நாமோ இன்றும் சம்ஸ்கிருதமா? தமிழா? என்று காலிசட்டிக்குள் குதிரையைத் தேடுகிறோம்.

ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் (அ) பொருளின் நகர்ச்சி விதிகள்".

1.முதல் விதி:
"ஒரு பொருளின் மீது விசை செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்".

2.இரண்டாம் விதி:
"ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நகர்வு விசையின் சக்தியையும் திசையையும் ஒத்ததாக இருக்கும், பொருளின் நகர்வு வேகம் அதன் எடைக்கு நேர் எதிர்மாறாக இருக்கும்."

3.மூன்றாம் விதி:
"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. "

ரிஷிக்கு தோன்றிய கருத்து நியூட்டனுக்கும் தோன்றி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படியே அடுத்தடுத்து மூன்று சூத்திரங்களும் உள்ளதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக