About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சமையல் மகத்துவம்!

பொங்கும் அரிசியிலேயே சமத்துவம் இல்லை. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைக்க வேண்டும். எல்லா ரகங்களையும் உலையில் சேர்த்துப் போட்டால் அதில் பாதி குழைந்தும், சமைந்தும், அடிபிடித்தும், நறுக்கரிசியாய் தங்குவதே இயல்பு. வெந்த அரிசியில் குற்றமில்லை, சமைக்கும் பாங்கு அறியாமல் ஒன்றாய்க் கலந்து சோறு சமைத்தவன் செயலில்தான் குற்றம்!

சமுதாயத்தில் வேற்று மதத்தாருடன் தோழமையுடன் பழகுவது தவறல்ல. அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம் நெறிக்கு ஏற்புடையதன்று என்பதைச் சிந்தியாமல் அச்சமூகத்தில் கலந்து உறவாடி ஒட்ட முடியாமல் தவித்து இணக்கமாய் இருப்பதுபோல் நடிப்பது என்பதா சமத்துவம்? 🤔

சமையல்/ சமயம், இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. ஒரே நெறியில் ஒரே பக்குவத்தில் பிசகில்லாமல் கலந்து ஒரே குறிக்கோளைப் பிழையின்றி அடைவதே இதன் சிறப்பு.

அரிசியின் பரிணாம நிலைகளான நெற்பொரி, அவல், புழுக்கல், களி, அடிசில், கஞ்சி, இட்லி என நாம் உண்ணும் சோறுக்கே வெவ்வேறு நிலைக்கேற்ப சமைக்கும் பக்குவம் மாறுபடுகிறது. நம் சமயங்களும் அப்படித்தான்! உணவில் அறுசுவை இருக்கலாம் ஆனால் பஞ்சபக்ஷ பரிமான்னம் என்னும்போது சமைத்து இலையில் பரிமாறிய உணவின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கிறது. 👍

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக