About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 19 ஜனவரி, 2023

பழனியும் செவ்வாயின் காந்தப்புலமும்!

காந்தப்புலம் என்பது செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால், பூமியைச் சுற்றி காந்த மண்டலம் கவசமாக இருப்பதுபோல் செவ்வாய் கிரகத்தில் இல்லை. ஏன்?

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்த காந்த மண்டலம் மறைந்து போனதாம். அதன் விளைவாக காஸ்மிக் கதிர்வீச்சுகள் நேரடியாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் (Martian atmosphere) புகுந்து செவ்வாய் கிரகத்தை உயிர்கள் வாழ முடியாத இடமாக மாற்றியது.

நாஸா ஆர்பிட்டர் மூலம் சேகரிக்க்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்த இந்திய விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் காந்தப்புல சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves) உள்ளதென கண்டறிந்தனர்.

இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் (Mars Surface) இருந்து சுமார் 1,000 முதல் 3,500 கிமீ உயரத்தில், விடியற்காலை, பிற்பகல் மற்றும் அந்தி சாயும் பொழுதில் பெரும்பாலும் அடர்த்தியாய் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் தொடர்பான பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். முருகன்- பழனி- செவ்வாய் தொடர்பைப் பற்றி நம் மிகப்பழைய பதிவில் சொல்லியிருந்த விஷயத்தை நினைவூட்டிப் பாருங்கள். செவ்வாய் கிரகத்தில் எப்போது சாலிட்டரி வேவ்ஸ் அதிகமாகிறது?

இங்கே பழனியில் நவபாஷாண முருகனுக்கு விளாபூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நேரத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கும் சமயம் அங்கே செவ்வாய் கிரகத்தில் காந்தபுல அலைகள் அடர்த்தியாய் எழுப்பப்படுகின்றன. இங்கே இராக்கால பூஜையில் சந்தனம் சாற்றிக் குளிரூட்டிய பிறகு செவ்வாயில் காந்தப்புல அலைகள் எழுவதில்லை. ஆக செவ்வாயில் உயிர்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் போகர் பிரயத்தனப்பட்டது தெரிகிறது!

"தரணீ கர்ப்ப ஸம்பூதம், வித்யுத்காந்தி ஸமப்ரபம், குமாரம் சக்திஹஸ்தம் ச, மங்களம் ப்ரணமாம்யஹம்" 

என்பது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்லோகம். அதாவது பூமித்தாயின் கர்ப்பத்திலிருந்து உதித்த செவ்வாய் கிரகமே, செவ்வேளின் அறிவொளி காந்தம் சக்தியூட்டப் பிரகாசிக்கும் உன்னை வணங்குகிறேன் என்பதே பொருள். 

ஆக இங்கே பூமியில் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேகம் பூஜை நடக்கும்போது அங்கே செவ்வாயில் அதிர்வலைகள் திடீரென தன்னிச்சையாக எழுகிறது. இதற்கான காரணத்தை நாம் அறிவோம் ஆனால் வடஇந்திய / நாஸா விஞ்ஞானிகளால் புரிந்துகொள்வது கடினம். என் முதுகலை இயற்பியல் பாடத்தில் இதுபோன்று நடக்கும் கோட்பாட்டை  A disturbance of a self-reinforcing wave packet (soliton) with nonlinear dispersive effect என்று படித்த நினைவு உள்ளது.

அதாவது செவ்வாயில் ஒரு காந்தப்புலம் நிரந்தரமாக இருந்து அது உண்டாக்கும் காந்தவிசை அதிர்வலைகளின் விளைவு எப்படி இருக்குமோ அப்படித்தான் திடீரென மூன்று வேளையும் சாலிட்டரி வேவ்ஸ் அந்நேரம் மட்டும் விநோதமாய் எழும்பி மறைகிறது.

இங்கே விக்ரஹத்திற்கு மந்திர கோஷம் முழங்க அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்போது அங்கே இதன் தாக்கம் தெரிகிறது என்பதே நிஜம். சுருக்கமாய்ச் சொன்னால் இங்கே பூமியில் த்ரிகாலமும் மந்திரங்கள் நவபாஷாண சிலை முன் ஒலிக்கும்போது அங்கே மாற்றங்கள் பதிவாகிறது. ஓம் சரவணபவ 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக