About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கிருஷ்ணரின் இறுதிக் காலம்

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது.
கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.
தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான்.
அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.
அஸ்த்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் வியாச பகவான் மூலம் தெரியவந்தது. துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது. “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.
அது மாசி மாதம், கிமு.3102. துவாபர யுகம் முடிவுற்றது. கலியுகம் பிறந்தது. பாரெல்லாம் பாவங்களும் துன்மார்க்க நெறிகளும் துளிர்விட்டு எழ, தர்மம் என்னும் பசு ஒற்றைக் காலில் நின்று திண்டாடியது. யுகம் கலிபுருஷனின் கட்டுப்பாட்டில் வந்தது. இக் கலியை வதம் செய்ய திருமால் 'கல்கி' அவதாரமாக வருவார். 
Image may contain: 1 person   Image may contain: text
ஓவியர்: வட்டாடி பாபைய்யா
சித்தர் போகர் தன் ஜெனனங்களைப் பற்றி சொல்லும் போது.. தானே பஞ்சபாண்டவர்களாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றியதாகச் சொல்கிறார். ஒன்றே பலவாக இருந்து கதாபாத்திரங்கள் நிகழும் அதிசயத்தைப் பாருங்கள்.  போகரை தரிசித்தால் திருமாலை, முருகனை, இராமனை, கிருஷ்ணனை தரிசித்ததற்கு சமம். சித்தம் இருப்பின் வாய்க்கும்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

The scientific inventions of Siddhar BOGAR

-  S.Chandrasekar


With reverential obeisance to the holy feet of my beloved guru BOGAR, I take this moment to showcase his technical inventions and scientific experiments. The mystic man Bogar is considered to be one of the 18 siddha purushas of the siddha lineage in South India. Lord Shiva being the Aadhi siddha himself had bestowed upon Sage Agasthya to have foremost authority over the group. It was Bogar who used nine poisons with herbal extract and sculpted the existing divine statue of Lord Muruga at Palani hill in Dindigul district of Tamilnadu. Panchapaashaanam, Navapaashaanam, Dasapaashanam are different chemical compositions that remain sturdy for several thousand years. The holy water after ablution (abisheka) to idols made of the pashaana composition cures hundreds of known diseases.

In 2013 I published an abridged concise treatise in Tamil for the mega work ‘Bogar-7000’. The original lengthy poetry composed in Tamil with seven thousand songs is called Sapthakaandam as it has seven kanto comprising 1000 songs in each. Each song has four verses set to alliteration of classical Tamil grammar meter. Siddha Bogar has to his credit several thousand voluminous compositions spreading over topics like medicine, elixir, oceans of birth, procedure to invoke shiva-shakthi, epic of wisdom, mastering ashta siddhi, stages of samadhi, black magic, salts, alchemy, airplane, ship building, etc. It is believed Bogar left China around 4 BC and later attained Nirvikalpa samadhi in 7 AD at Palani. Through his divine revelation, I had the opportunity to have his darshan in his current form.

For several aeons Bogar has been under the tutelage of his guru Kaalaangi, and mastered the nuances of wisdom. Under instructions from his guru, Bogar took the form of a Chinese old man Laotzu, and has been living thence for several yugas. He chose China for various good reasons and proximity to the Himalayas (Meru hill). Sage Agasthya had himself showered praises on Bogar as the ‘Flying Siddha who rarely remained on earth’. With the assistance of his faithful disciple Pulipani, Bogar chalked the ways of performing pooja and formulated steps to preserve his masterpiece statue carved out of Naavapaashaana. He had said that Sathuragiri is the head quarters of all siddhas. It is a hilly terrain and abode of Lord Shiva that is equally respected as Mount Kailash. Sathuragri is situated 10 km from Watrap in Srivilliputur taluk of Tamilnadu. It is here that Bogar, a goldsmith, had learnt the secrets of alchemy and elixir from his guru Kalaangi who is believed to be one among the Navanath siddhas.

Siddha Bogar had fathomed the essence of the works of seniors and contemporaries. He had studied all the scriptures through thousands of years at Meru hill. Through the words of Bogar, it is understood that the samadhi of books (libraries) are on the western side of Meru. Each time at the onset of apocalypse, all rishis reached the cliff with the heaps of scriptures and palm leaf manuscripts, only to leave with the custodian Lord Shiva. Now what we claim as the snow peak Kailasa is the store house of books. Bogar claims to have read and digested the contents in no time. His narration ‘In Kaliyug, the people living south of Himalayas will not even get to read at least 1% of what I read’ makes us spellbound.

Hope you are aware of the controversy on Vaimanika shastra that erupted at the Indian Science Congress held last year. Now after going through the achievements of my beloved guru, I can strongly say that Vimanika shastra is true and can be interpreted with reference to other similar ancient scriptures that are available. Prior to siddha Bogar, rishis like Bhardwaja, Ashwini, Tiruvela, Kashyapa had made and flown indigenous vimanas. Though fuels varied, the purpose of the machine served. They had flown and crossed several yojanas in few minutes. The Vaan Ratha as Bogar called it existed in gold, silver, and alloy of five metals, panchaloka / panchadhathu. Owing to the colour of alloy mixture it was reddish and he coined it Sempuravi in Tamil (the red chariot).

The typical shape described by him appeared like temple chariot. Since it resembled the gopura vimana of temple, the flying plane was called a vimana. In my view, he is the only siddha to have constructed and operated several airplanes to fly across seven seas carrying rishis and Chinese folks on a joy ride.

After roaming over sapthasagara (Red Sea, Caspian Sea, Black Sea, Dead Sea, Indian Ocean, China Sea, Persian sea), he returned to China and offloaded the people who were in disbelief and joy. In fifth kanto, he mentions the sea abutting Gulf and Gujarat coast as Krishna samudra. 

He was the one who built a gigantic ship with wood and iron measuring 800 yards in length, 100 yards in breadth and 100 yards in height. It had seven tiers, decks and a fort of 64 apartments with sufficient glass windows facing North-South and doors facing East-West. His ship ran on powerful steam engines. With well laid hard core pipes to carry hot steam across the floor to operate pistons in turbine engines and rotate the propeller, he ensured the pipes were leak proof and conveyed high pressure hot steam. With high rise chimneys for letting out smoke, he erected the steering on the top deck to facilitate his view of sail. 

Details of ship building are described in his songs (No: 1927 -1945). Thus he wrote:
‘Built a massive ship to accommodate thousand people
Chinese aghast with calculated formula on wooden planks;
Decided on impeccable geometry to make the floating giant
Stood on iron nailed pillars and turbine powered by hot steam

It leaves us speechless to visualize the extent of woods that were chopped, treated, shaped and nailed in place. The magnitude of iron, glass and ropes required, the overall labour involved in the execution of project with perfect trigonometry, hydraulics, mechanics and dynamics of viscosity –buoyancy, would certainly leave us guessing.

In song 2204, he narrates how he designed the Aero-chariot, the Vaan Rathaa, much to the astonishment of kings. His vertical chariot measuring 30 yards in breadth, 100 yards in height with 3 cylindrical stages had strong base with wheels and adjustable stilt to support corners. It ran without being pulled by horses (Asvamilla vandi). He described the structure as fuelled by burning coal to heat the boiler. The hot steam rotated the magnetic propeller to swiftly rise up the sky with booming noise. 

Bogar says that all panchabootha elements play a vital role in the flight dynamics. He flew over China over a range of 30 km in sky. The basic shape of the temple Rathas of South India is shown here. It is understood he used black magnets to improve electromagnetic force in flight dynamics.

In song 2215-2220, he describes the route travelled and the cities to which he had flown. He had used the Tamil system of linear scale Kaadham, meaning 10 miles. In nutshell:

Beyond eight hundred kaadhams, carried rishis and Chinese to Rome
Alighted at the tomb of Roman charioteer, saw the samadhi of Jesus;
Seen seventy nations around and countless rishis on the land of Jews
Off loaded people in their lands after seeing wonders of the world

His songs narrate the physical appearance, glow, sound properties and driving mechanism. With flair to ride on Ashwini maharishi’s airplane, Bogar disclosed his wish and had permission to drive. It appears the plane driven with joystick also obeyed to oral command. Bestowed with Lahima, siddhas generally travelled the space through flying mode (Gegana siddhi) by keeping a special Gulikha in mouth till they descended to earth. Song 4485 says,
  
Visited the ashrama of Ashwini, sighted the airplane with joy in wild dense
After breath control, climbed over with gulikha on hand, flew to the far off;
As instructed, stewarded my way right and left to perfectly land in vicinity
Oh! The fuel power had run down and your flight is again on earth my son.’

His song 4513 has proof of his demonstration as to how successfully he explored and tested the voice synthesis of oral command as instructed by Maharishi Ashwini.

To my wish and command, the plane should obey oral orders
Become still at the touch of my fingers to descend at the street;
Maharishi taught machine language to control it as desired
Generous enough to allow me to take it to the land of China’

Bogar has lived through many yugas and seen apocalypses. The songs give a hint that he was active in society until he went into samadhi around 7AD.  Besides airplane and steamer, Bogar had invented many scientific tools for the welfare of mankind. Personally I am of the opinion that many literary works of Tamil siddhas were not explored in the past and research being restricted to Sanskrit scriptures. With proper approach and research, it can be established that several advanced scientific methodologies were put to use in ancient Bharatham. The third kanto of Sapthakaandam throws light on the technical innovations of the scientist, siddha Bogar. He is the pioneer of many modern tools that are presently used.

Ceramic, SCUBA apparatus, parachute, hot air balloon, plain and tinted glass, mirror, underwater telescope, magnifying lens, spectacle, handmade paper, automatic printing machine, kaleidoscope, dielectric , thermo couple, electroplating, artificial gem etc. are his inventions. Sage Agasthya maharishi embraced and praised him saying ‘Long live my vigyana siddha’.


In song 2381, he narrates the secrets of glass making and reflective mirror. After making the plain glass without color tints, he applied hot coat of Lead amalagam on one side. This gave the perfect result of mirror. 
Treated mercury partially on glass I meticulously made
Saw my bright face on the mirror with perfection as it was;
Siddha rishis thronged to glimpse, praised me for the invention
What is the use of decoration if the beauty is not visible to thy?

Thus he taught many technical details to Chinese, whom he certifies as ‘innocent and pure’. Other rishis acclaimed that there is no scientist to match his wisdom on earth, as sage Agasthya has certified Bogar as the flying Aathi siddha (though Lord Shiva is the first Aadhi siddha). Bogar had extensively travelled the world through Gevuna siththi mode.

Another magnificent work Bogar 12000 is said to contain minute details of nuclear products, fission, fusion; ambrosia for all diseases to occur in kaliyuga, constructing special planes to outer planets, existence of aliens, geo properties of Jupiter and Mars, acoustics, metrology, land survey and other related branches of science and technology. Every Indian should feel proud of the Tamil siddhas who had built Bharatham as the most civilized and advanced nation, long before human settlement and civilization began in other parts of the world. 

(This essay was contributed to Canada (Ontario) based 'Sanskriti' magazine that speaks about Indian Culture, Heritage, Achievements, Practices and Values.)

புதன், 5 ஆகஸ்ட், 2015

நவபாஷாண சிலை - Bogar's Navapaashana idol

போகருடைய நவபாஷாண சிலை பற்றி சில ஆய்வு பூர்வமான தகவல்கள் இதில் சொல்லப்பட்டது. நான் ஆய்வு நூல் எழுதும்போது, சேகரித்த சில விஷயங்களை  இங்கே  பகிர்ந்துகொண்டேன். இது 'மூன்றாவது கண்' எபிசோட் எண் 246 ல் ஆகஸ்ட்  2015ல் இடம்பெற்றது. பூம்பாரை, பெரிச்சியூர், பழனி ஆகிய தலங்களில் உள்ள  பாஷாண  சிலைகளின்  தன்மை மற்றும் உருவ முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டன.  திரு.அனீஸ் பேட்டி கண்டார். இந்த நிகழ்ச்சியில்  பத்மகிரிபாபா என்ற சாமியாரும் பங்குகொண்டார்.

Youtube link: https://www.youtube.com/watch?v=x6oUby-HNc0



புதன், 10 ஜூன், 2015

Sow seeds, plant saplings, nourish trees

வனம் வளர்ப்போம்
=================
ஹிந்து மதத்தில் எல்லா உயிரினங்களும் கடவுளின் ரூபமாகவும் அனுபூதியாகவும் கருதப்படுகிறது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லாமே அவன் குடியிருக்கும் கோயில். எல்லா கோயில் தலங்களிலும் தீர்த்தம், விருட்சம், மூர்த்தி என்பது விசேஷமானது. ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பட்சிகளும், விலங்குகளும், மரங்களும் தொன்றுதொட்டு நம்மால் துதிக்கப்பட்டுவருகிறது, அதனால் ஜீவகாருண்யத்தை மிகவும் போற்றுகிறோம்.
மனிதனாகப்பட்டவன் தன்னுடைய வாழ்நாளில் மரங்கள் நட்டு வளர்த்து அதை பராமரித்தால், அவனுக்கு புண்ணியம் கிட்டும் என்கிறது புராணங்களும் சாஸ்திரங்களும். சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத ecosystem காப்பாற்றும் வகையில் வனத்தை வளர்க்க மதம் வகை செய்துள்ளது. வனம் என்றால் என்ன மரங்களை நடவேண்டும்? அன்றாடம் வீட்டில் பயிர் செய்யும் உணவு மற்றும் மூலிகை தாவரங்கள் அல்ல. காலத்திற்கும் நன்மை பயக்கும் விருட்சங்களாய் இருக்க வேண்டியது அவசியம்.
வனம் வளர்ப்பது, ‘வன மகோற்சவம்’ கொண்டாடி ஊர் மக்கள் கூடி ‘வன போஜனம்’ உண்ணவேண்டும் என்கிறது கார்த்திகேய புராணம்.
"ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும், ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்களுக்கில்லை நரகம்தானே."
ஒவ்வோருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் (வளர் பிறை நாட்களில்) ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி, பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை ஆகிய ஒன்பதுவகை புண்ணிய மரங்களை நட்டு வளர்க்கவேண்டும். இவற்றில் ஒன்றையேனும் நட்டு வளர்த்தவருக்கு நரகம் இல்லையே என்கிறது இந்த கார்த்திகேய புராணம்.
கார்த்திகை மாதத்தில் 'ஆம்லா' என்னும் நெல்லி மரம் கீழ் திருமாலும் லட்சுமி தேவியும் வாசம் செய்வது ஐதீகம். சாஸ்திர சம்பிரதாயம் மூலமாக பூமியை திடப்படுத்தி, மழையை உண்டாக்க, நிலத்தடி நீர் நிலைகளை பேணும் வகையில், மரங்களை வைத்து ஆராதிக்க வேண்டும் என்ற கருத்தை நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் மற்ற மரங்களுக்கும் ஒவ்வொரு இறைதொடர்பு உள்ளது என்பதை நாம் அறிவோம்.
சில இடங்களில் மரத்தை நட்டபின் தண்ணீர் ஊற்றுவதில்லை, வளர்ந்தபின் அதை பராமரிக்காது விட்டால் வெட்டிகொண்டு போவது வழக்கமாகிவிட்டது. இன்று பல இடங்களில், மரம் வைக்கும் இயற்கை அமைப்பு ஆர்வலர்கள் ஓர் அளவுக்கு இதை பாதுகாத்து வருகிறார்கள். நீண்ட நாட்களாய் இந்த கட்டுரையை பதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டியது.

வெள்ளி, 15 மே, 2015

சோழ வாரிசு வருகிறார் ... பராக் பராக்..!

பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் மஹா ராஜ ராஜ ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார், சகோதரி குந்தவை, இளைய சகோதரர் மற்றும் தாயார் ராணி சாந்திதேவி அம்மாள், சிதம்பரத்தில் (தில்லை) குடமுழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்தபொழுது எடுக்கப்பட்ட படம். 

Image may contain: 4 people

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில். கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத இந்த சிறப்பு மரியாதை இவர்களுக்கு மட்டுமே தில்லையில் அளிக்கப்படும். இன்று இவர்கள் இவர்கள் ஏழ்மையில் இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் தெற்காசியாவைக் கட்டி ஆட்சி செய்த சோழனின் வாரிசுகள். சிதம்பரம் நடராஜர் கோயில் முக்கிய நிகழ்வுகளில் இச்சம்ப்ரதாயங்களை இன்றும் தில்லை தீட்சிதர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..

வெகு விரைவில் ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லையில் பஞ்சாட்சரப் படியில் அமரவைத்து தீட்சிதர்களால் சோழ அரசராக முடிசூட்டப்பட இருக்கின்றது. இதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லையென்றால் நம் ஆட்கள் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள்.

சுந்தர சோழர் (கி.பி.10) காலத்து செப்பேடுகள்படி 'பிச்சாவரம் பாளையக்காரர்கள்'தான் சோழர்களின் நேரடி வம்சத்தவவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. தில்லை நடராஜர்தான் இவர்கள் குல தெய்வம். பட்டத்திற்கு வரும் வாரிசு, சிதம்பரத்தில் இறைவனின் கர்ப க்ருஹமான 'பஞ்சாட்சர படி' யில் அமர்த்தபடுவார். அந்த பட்டத்து வாரிசு இறைவனாகவே கருதப்படுவார்.

தில்லையின் ஆடலரசனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படும் அதே வலம்புரி சங்கில் நீர் எடுத்து தலைமை தீட்சிதர் அவர்கள் இந்த சோழ வாரிசுக்கு தலையில் நீர் ஊற்றி நிகழ்ச்சியை தொடங்குவார். இவருக்கு தலையில் பட்டம் கட்டி, மந்திரங்கள் ஒத பனை ஓலைகளை செருகி , அத்தி மாலை சாற்றி பட்டாபிஷேகம் செய்வார்கள். இந்த அத்தி மாலைதான் சோழர் வம்சத்து பாரம்பரிய மாலை. காலங்காலமாக தீட்சிதர்கள் தான் இதை நடத்திவைப்பது மரபு.

ராஜ சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் அவரை வீற்றிருக்க செய்து, மந்திர கோஷம் மத்தியில், தலைமை தீட்சிதர் புதிய மன்னருக்கு வம்ச வாளும், புலி கொடியும் தருவார். தீட்சிதர்கள் தலைமையில் சோழ பட்டாபிஷேகம் நடக்கும் விதத்தை பற்றி சேக்கிழார் (கி பி 12) தன் பெரியபுராணத்தில் குற்றுவ நாயனார் சரித்திரம் என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார். குலோத்துங்கன் காலத்திலிருந்தே இது முறையாக நடந்து வருகிறதாம். கோயிலின் பேரம்பலமான சோழ மண்டகப்படி இடத்தில் மன்னர் அமர்ந்து பொது மக்கள் பிரச்சனிகளை தீர்ப்பது மரபாகும். சோழப்பேரரசு கிபி.1279ல் (13ம் நூற்றாண்டு) முடிவுக்கு வந்தது. 3ம் ராஜேந்திர சோழன்தான் கடைசியாக ஆட்சிசெய்த சோழ மன்னன்.

இவர்கள் அரியலூர் ஜமீன், மாயவரம், சிர்காழி, கடலங்குடி பாளையக்காரர்களோடு சம்பந்தம் செய்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது. கிள்ளி, செம்பியன், மலையமான், என்று ஷத்ரிய குல சோழர்களுக்குள் பல உட்பிரிவுகள் வந்துவிட்டதாம். பிற்காலத்தில் கள்ளர் இனத்தவர்கள் தங்களை இந்த வம்சத்தோடு தவறாக தொடர்பு படுத்தி கொண்டு பேசுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Image may contain: 2 people, people standing

இது ஒருபுறம் இருக்க, ராஜராஜ சோழன் படையெடுத்துச் சென்ற காம்போடியா, மாலம், ஸ்ரீவிஜயம் சுமத்ரா, இலங்கை போன்ற தேசங்களில் சாம்ராஜ்ய்த்தையும் வம்சத்தையும் வளரத்தார். இன்றைய உணம்யான வாரிசு யார் என்ற சர்ச்சை நடப்பதாகவும், இந்த சூரப்பர் வம்சத்தை ஏற்கமாட்டோம் என்று மலேசிய தமிழர்கள் போட்ட விமர்சனத்தை முகநூலில் பார்த்தேன். அதுசரி, இவர் வம்சம் பற்றி இன்று சண்டைபோட்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? 

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

Moondravathu Kan - TV programme - Vendhar TV

வேந்தர் டிவி சேனலில் 'மூன்றாவது கண்' அமானுஷ்ய தொடர் நிகழ்ச்சிக்காக வடபழனி சாலை சந்திப்பில் நடந்த நள்ளிரவு ஷூட்டிங். படபிடிப்பு குழுவினரோடு இணைந்து பணிசெய்த அனுபவம் மறக்கமுடியாதது. சித்தர் போகர் பற்றியும் ஹோமத்தில் தெய்வங்கள் என் செல்போன் காமிராவில் பதிவாவது குறித்த எபிசோட் (Episode # 177) வரும் புதன் கிழமை இரவு 9.30 -10 மணிக்கு ஒளிபரப்பாகும். அன்பான குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Watch the TV programme on Youtube:  https://www.youtube.com/watch?v=G2Y0q2yNTpQ
I sincerely thank the Vendhar TV crew that interviewed me for a shoot for their popular episode 'Moonravathu Kan' (3rd Eye) that speaks about thrilling mystic experiences. The episode throws light on siddhar Bogar and me; and also about images of gods being captured by me in Live homam. The crew was lovable and did an excellent work with meticulous effort. My sincere thanks to the members. As a memento, I gave them books authored by me. Telecast date: Vendhar TV, April-29, time: 9.30-10 pm (IST) 
             
 Amman sitting posture, sword on right hand,                           The programme received good feedback on Facebook        udukkai on left, fish on top, parrot on the bottom                                        My sincere thanks to Vendhar TV.
























Standing from left to RightAnchor Mr.Arun, Project Director Mr.Raja, Me, Cameraman Mr.Om Prakash.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

My sincere thanks

I sincerely thank the following who recognised me as a writer,  confidently offered opportunities during my career and published my books.

Marina Books, is the most preferred online book seller by domestic and international readers for timely delivery of my books through safe shipment. 

New Century Book House released two books, 'Human Resource Management: Practice, purpose and performance' and a social subject in Tamil 'Kaiyendhum Manidhargal'.


LEO Books and DK Publishers brought out my two books. 'Rewinding Thoughts' in English and 'BOGAR-7000 Sapthakandam (Vilakkavurai)' in Tamil.


Vijaya Pathippagam (Coimbatore) published my books 'Unnakul oru undhu sakthi' and 'Vettrithaan Ilakku', 'Siththargalin Ariviyal Pangalippu', 'Thagaval Thodarbum Samooga Oodagangalum'. The titles are on Self-improvement, motivation, social media and siddhas' contribution to science.

Poovizhi Pathippagam (Chennai)  published my three books i) Nera nirvagam ii) Suyathozhil vetrigal iii) Thalaimai panbugal and released at the Erode Book Fair-2012.

Karpagam Puthakalayam (Chennai) published four books i) Aalumai Thiranai Valarthukolvadhu Eppadi  ii) Yetrumadhi patri therindhu kollungal iv) Yathartha vaazhkaikku oru kaiyedu iii) Adhisaya Siddhar Bhogar iv) Nerkaanalukku thayaaraagungal


Mr.ADS Kumar. a logo and brand designer,is a highly creative person with whom I worked many challenging projects during 2005-10. He is a simple and nice human. With punctuality and passion for creation, he is a successful businessman who founded www.nikitha.in, www.adskumar.com

Mr. Maju Emanuel, was the managing editor of Travel & Shopp from 2006-08. Earlier he was with Sahara Airlines and then took up this new role. A soft spoken, humble, unassuming man without 'bandha' is a rare combination. He always gives the best try in daring attempts and entrepreneurs would emulate his attitude. Currently he stays and works in New Zealand.


The ICFAI University, Hyderabad, published eight papers in its HRM Review monthly journal between 2008-10. Received a letter of appreciation from Managing Editor.



The Hindu, India's No.1English Daily, published many of my articles in Metroplus and Openpage. For any writer, getting his work published in this newspaper is always a dream and pride. 'A heritage shared', 'Pitchu Master', 'Voice your views' were some of those published.

Dinamalar and Dhinamani are leading Tamil dailies that published book reviews. This also brought in popularity and wider readership. 


Business Manager, acclaimed as the best HR magazine of India, has been publishing my articles since March 2009. The magazine encourages leading authors in the Human Resources domain and also publishes important labour judgements happening across the country. Its Chief Editor has personally sent me a letter of appreciation.


Sanskriti, a Canada based e-magazine for Indian culture and heritage, published my English articles on Vedic science and Siddha. 


Thozhil Vaniga Mudaleedu, a leading tamil business monthly, published several articles, writeup for cover stories and episodes between 2005-07.


Traveling stories magazine is a US based net magazine and publishes fascinating travel stories from across the world. It has published my three travel stories under ASIA category. Feedback from various readers have been positive and thrilling.

Poetry.com provides a platform for wisdom, literature and experience. It has published my poems like Towards peace, From the heart, The lost glory, The opaque veil, Skylight. Some of these were selected among the best and released as CD musical album titled 'Soul Series' and 'Guided by voices'.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

Full Part Woman

Invariably in all language dailies in the last few weeks, I came across the hot news about Tamil novelist Mr.Perumal Murugan. Though a link to download a free copy as eBook was available, I did not have the patience to sit and read in front of the laptop as it was unconventional to me. Being a book lover, I allot time every day to read books leisurely once the daily household works are over. A passion for book reading should not end up in a backache or irritation on eyes, you see.

Image result
It is said the story line of Mathorubagan (One part woman) originates at a local temple festival where a third party indulgence is allowed for fertility among the unsuccessful couples. Quite lately many from the voiced community staged a demonstration and attracted the media to ban the title and warn the writer as well. Another faction of revolutionists voiced support to boost the trend of projecting progressive issues to the limelight. One part woman or full part woman, what does it matter when it becomes hot news? Of course, a delicate issue that had to be dealt with care. The push-pull effect on the professor-writer has led him to declare that the writer in him is dead and opted for a voluntary transfer to Chennai. So what if the writer moves out of homeland? This smoke billows till a next controversy erupts in the publishing world. The protest against a sensitive topic will not fall silent even after the writer or publisher withdraws the copies to pulverise. Is it a boon or bane for publicity? Feminism and male chauvinism are always under debate.

Since the age known, it is argued that such controversies have never died. Citing examples from the Mahabarath and Ramayana, it has been continuous till date to either support or to oppose fidelity. Whatever be the issue, the final object of ridicule is not one part woman but a full part woman. Depicted as an eyesore, she bears the grudge of the society and community. Any subject is a good subject, subject to approval by the reading society and as long as it is not subjective. A writer’s conscience is the first reader and honest critic.

Biologically speaking about the XX -XY chromosomal theory on patterns of DNA, it could be true that every woman is one part man and every man is one part woman. When it comes to bearing shame, it is women; and bearing pride, it is men. As a book worm and ardent fan of many legendary senior writers like Kalki, Lakshmi, Deepam Parthasarathy, Kuvempu, Masthi Venkatesha Iyengar, Rajam Krishnan et al., I observed they handled socially sensitive topics with utmost care and took ethical accountability of message delivery with maturity.

Came some prominent players like Jeyakaanthan, U.R.Ananthamurthy, Sujatha, Sivasankari, whose writings stirred controversy at some time or other for socio-cultural reasons. At the same time, devaluing the status of a writer is something not unusual. Self-exile or forced expel from the arena of writing is unhealthy. When I met some members of publishing houses, they told that anything can be written and released either by the writer or for a lump sum royalty from book houses.

Be a literary work by a physically full part man or woman, the protest should subdue. When the print medium is converted into a visual medium, the impact and protest widen on a larger canvas. Here comes my voice of empathy as poetry for those portrayals without resistance.

“In the limelight of social ethos
Travels my lead character in dark;
Oh, she goes solitary sans security
To travel only in shame and fame;
Looking timid and feared of rude
The jewels of pride cast in nude.
Much delighted progressive writers
Cheer up the beacon of sensitivity
Spare the woman and her deity,
We have not come of age for gaiety.


Staring at the horizon, let’s stand up to find a healthy trend in writing and reading, for books are the windows to the world. Many book fairs may come and go but the dignity of writing should not be let down. My dear fellow writers in full or one part, hats off to your skills but please read the pulse of society before wielding the pen.

சனி, 20 டிசம்பர், 2014

Latest book

The following book will be released by Vijaya Pathippagam, Coimbatore, in March to coincide with GD.Naidu's birth anniversary.


செவ்வாய், 2 டிசம்பர், 2014

கருட புராணம் - GARUDA PURANA

கருடபுராணம்

இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..

சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம். இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?

அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானது தான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள். யார் அந்த முன்று நபர்கள்? 
கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.

இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.
யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.
அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.
செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.
உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.

இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள். தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள். அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்மீது விழுந்து அழுத்துவார்கள். இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதைபதைத்து துடிக்குமாம்.

மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.

உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.
காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக்கூறுகிறார்கள்.

ஆவிகள் கருப்பு வெள்ளையாகத்தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில் ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள் காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.இதற்கு பல காலமாக ஆவிகளைப்பற்றிய எனது தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பல பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது.

பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது. மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய் இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில் இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது. முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள் புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.

சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை என்றே நான் கருதுகிறேன். 
காரணம் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும் மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.
முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்எப்படி வந்தமைகிறது என்பதைக்கருட புராணம் அழகாகக் கூறுகிறது.

இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
நான்காம் நாளில் வயிறும்
ஐந்தாம் நாளில் உந்தியும்
ஆறாம் நாளில் பிருஷ்டமும்
ஏழாம் நாளில் குய்யமும்
எட்டாம் நாளில் தொடைகளும்
ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.

பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் 
நிகழ்த்தப்பட்ட எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.

மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்பற்றியோ துளி கூடக் கவலைப் படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக் கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.

அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலைஅமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.
அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.

மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்தநகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.

இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம். இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.

அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.

ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.

புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.

மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக்ணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.

இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.

நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரண தேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.