About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 18 மார்ச், 2017

முருகனை நினைத்தாலே கவி பொழியும்

        வீடுபேறு தரும் வீட்டினன்                            
                          Image result for முருகா

படைவீடு கொண்ட எம்பெருமான்
 பதமலர் பணிவோம் தினம்தினமும்;
கடைவீடு கொண்ட முதிர் பழமாய்
 கருத்துள்ள கந்தர் அநுபூதி வழங்கி;
மடைவீடு திறந்த வெள்ளமென மனம்
 மகிழத் திருப்புகழ் தந்த அருணகிரியார்;
இடைவீடு மருந்தென எழுந்தருளி
 ஈய்ந்த போகரின் உள்ளக்களிப்பென;
நடைவீடு அமர்ந்த வேலாயுதம் தலம்
 நன்குடி போற்றும் சித்தன் வாழ்வென;
தடைவீடு ஒன்று வருமோ பக்தனுக்கு
 தயை கூர்ந்து அருள்புரி பெருமானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக