About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 22 மார்ச், 2017

திருவொற்றியூர் தியாகேசா போற்றி

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
"ஸ்ரீ தியாகராஜர் - வடிவுடை அம்மன், திருவொற்றியூர், சென்னை."
திருவொற்றியூர் ஒரு சிவ க்ஷேத்திரம். சமயக் குரவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம், ஆதிசங்கரர், பட்டினத்தார், வள்ளலார், தோபா சுவாமிகள், பாம்பன் ஸ்வாமிகள், ஆகியோர் வழிபட்ட இறைவன்-இறைவி... கவிச்சக்ரவர்த்தி கம்பன் தன்னுடைய இராமாயணத்தை இங்கு வட்டப்பாறை அம்மனின் சன்னதியில் அமர்ந்து காவியத்தின் இறுதிப் பகுதியை எழுதி முடித்ததாக தலவரலாறு சொல்கிறது. உக்ர காளியை சாந்த சுவரூபியாக்கியது ஆதிசங்கரர். அந்த பாறையில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தார்.


No automatic alt text available.

பட்டினத்தார் சமாதி கோயில் 
 




இன்று ஈசனின் பேரருளால் அவன் தாள் பணியும் பேறு கிட்டியது. ஊழிக் காலத்தில் கடல் புகாமல் ஒற்றிப்போகச் சொன்ன ஆதிபுரியின் தியாகேசர் மண்ணை மனமாரத் தொழுதேன்.. வேதங்களைக் மீட்டெடுத்த நாயகனின் இடபாகத்தாள் அன்னை வடிவாம்பிகையை, ஞான சக்தியை வணங்கி, ஏவிளம்பியின் பிரளயகாலத்தில் ரட்சிக்க வேண்டி இன்று புனைந்த என் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.
ஆரூரில் நான் பிறக்கவில்லைக் காண்
அஃதொன்றை குறையென நோக்கா - என்
அகமும் புறமும் நீரே நின்று ஆட்கொண்டு
அருமருந்திட்ட சித்த னானீர்.

அசையா நினைவாக ஆட்கொள்ள நினைத்தீர்
இசையால் உம்மை போற்றினேன் - மன
வாசையால் ஒற்றியூர் பேகரும்பு நாதனே
ஓசையின்றி பாடினேன் காணீர்.

ஆதிபுரியில் இந்நாளில் மகிழம்பூ நாதனை
ஆனந்தமாய் கிடந்து சேவித்து - நல்
லாழிசூழ் நெய்தலில் ஞான சக்தி
வெளிப்பட தொழுதே னடியை.

அகிலாண்டம் அதிர நிலமும் ஆட பேராழி
எழுந்து தண்டிக்கும் கணநேரம் - உம்
மடிதொழ இவனை நீர் காத்திடுவீரே
குடிகாக்க நமச்சிவாயமே வாரீர்.

பாபங்கள் துடைப்பீர் மறுபிறவி வேண்டா  
புண்ணியங்கள் ஈட்ட முயல்கிறேன்– யான்
கடந்திட்ட பிறவிகள் அறியேனே நின்டி
கிடந்து போற்றுகிறேன் உனையே.

அந்தோ இதுவரை சோதித்தது போதும்   
இந்தப் பிறவியோடு அறுப்பீர் – அருள்
கனிந்து வீடுபேற்றை நல்கு பிறையோனே
இனிமேலும் பிறவிகள் வேண்டா.

- எஸ்.சந்திரசேகர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக