About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 9 மார்ச், 2017

சுழற்சியில் வரும் அதே ஜெனன உறவுகள்

என்னுடைய ஆய்வில் சித்தர் போகரின் இன்னபிற ஜெனன அவதாரங்களை கண்டுகொண்டேன். சித்தர்கள் எல்லோருமே நினைத்த மாத்திரத்தில் சமாதியில் இருந்துகொண்டே மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தோ, ஒரே நேரத்தில் பலராகவும் ஜனித்துள்ளனர் என்பதற்கு மூலர், காலங்கி, போகர், அசுவனி போன்றோர் உதாரணம். போகர் கூட தன் ஆத்மார்த்த சீடனோடு அநேகமாக எல்லா பிறவிகளிலுமே 'குரு-சீஷ்யன்' உறவு முறையிலேயே வந்துள்ளார்.
முஹம்மது-அபுபக்கர், போகர்-புலிப்பாணி, லாவோட்சு -யின்ஸி, ஹாங்வு (மிங்)-ஜியான்வென், வீரப்பிரம்மேந்திரர் -சித்தையா, என்று போகருடைய ஜெனன சாகரங்கள் முடிவின்றி போய்க்கொண்டே இருக்கிறது. இவைகளை அவர் ஜெனன சாகரம் நூலில் சொன்னதில்லை. சித்தர் போகரைப்பற்றி முதல் முறையாக இங்கே படிப்பவர்களுக்கு இதெல்லாம் சற்றும் நம்பமுடியாத கட்டுகதையாகவே இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.
ஆதியில் நந்தியாக, பிரம்மா, திருமால், முருகன், இந்திரன், ராமன் கிருஷ்ணன், என்று அவதாரங்கள் எடுத்த பிறகு மேற்கண்ட இன்னபிற ஜெனனங்களை எடுத்தார். உங்களுக்கு மேலே குறிப்பிட்ட பெயர்களில் சீனாவில் மிங் பேரரசின் மன்னர் ஹாங்வு பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆனால் இதை கோரக்கர் தன்னுடைய சந்திரரேகை நூலில் ஒரு இழையாக முக்கிய குறிப்பு தந்துள்ளார். 'தன் நாட்டு பிரஜைகளை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக சீனாவில் போய் சில காலங்கள் சமாதி கொண்டு தக்க சமயத்தில் அங்கு மன்னராகப் பிறந்து அரசாளப் போகிறார்' என்ற செய்தி தான் அது.
மங்கோலியர் குப்லைகான் சீனா மீது படையெடுத்து தாக்கி கைப்பற்றி 'யுவான் பேரரசை' நிலைநாட்டினான். அதை தோற்கடித்து மீண்டும் தாவோ கொள்கைகளை நிலைநாட்டிய பெருமை 'மிங் பேரரசின்' மன்னர் ஹாங்வு வையே சேரும். பிரஜைகள் மகிழ்ச்சியோடு இருந்தனர் என்று சீன வரலாறு சொல்கிறது. அவருடைய உன்னத அடிசுவாட்டில் வந்த ஆத்மார்த்த சீடர் (மன்னர்) தான் ஜியான்வென். 
எல்லா பிறவிகளிலும் மூத்த பதவியை தலைமையேற்று அலங்கரித்தார் போகர். ஆனால் அவர் வழி பின்பற்றி வந்த சீடர் எல்லா பிறவிகளிலும் ராஜாங்க / குருவம்ச எதிர்ப்புக்கும், பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமலும், உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தங்களுமே ஏற்பட்ட வந்துள்ளது... இது அபுபகர், புலிப்பாணி, யின்ஸி, ஜியானவேன், சித்தையா வரை பொருந்தி நடந்துள்ளது என்பது எனது ஆய்வில் அறியச்செய்தார். தற்போது, வீரபோகராக பிறந்து தர்ம பரிபாலனம் செய்யும் போகருக்கு, சீடராக யார் உள்ளார் என்பது வெளியுலகிற்கு இன்னும் அவர் காட்டவில்லை.
இப்படித்தான் அவ்வப்போது சித்தர் போகர் பல ஆய்வு செய்திகளை எனக்கு சிரமம் இல்லாமல் திடீரென என் கண்ணில் காட்டுவார். அதை குறிப்பெடுத்து என் நூலில் விளக்கியும், உங்களுக்கு இங்கே பதிவாகவும் இடுகிறேன். எல்லாம் அவர் சித்தம்!
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக