About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 29 மார்ச், 2017

தமிழிலக்கியம் போற்றும் முருகன்

தமிழை நினைத்தால் முருகன் வருவான், முருகனை நினைத்தால் பாடல்கள் பொழியும், பாடல் என்றால் திருப்புகழ் நினைவிற்கு வரும், திருப்புகழ் என்றால் அருணகிரியார் வருவார். 

தொல்காப்பியத்தில் முருகனைப் பற்றிய குறிப்புள்ளது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலத்து கடவுள்களான முருகன், திருமால், இந்திரன்,வருணன் பற்றிய பாடல்: 

“மாயோன் (திருமால்) மேயக் காடுறை (முல்லை) உலகமும்   
சேயோன் (முருகன்) மேய (குறிஞ்சி) மைவரை உலகமும்
வேந்தன் (இந்திரன்) மேயத் (மருதம்) தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் (நெய்தல்) உலகமும்“.  
(தொல்காப்பியம்: பொருளதிகாரம்-5)


Image may contain: 1 person, text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக