About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 25 மார்ச், 2017

படமாக்கப்படுகிறார் சாவித்திரி

சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை “நடிகையர் திலகம்” என்ற பெயரில் படமாக்கவுள்ளனர். 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார். படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. அப்படத்தின் விளம்பர போஸ்டர் முன்பே வெளியானது. This is a biopic on actress Savithri.
Image may contain: 3 people, people smiling, text

'மஹாநடி சாவித்திரி' Mahanati Savithri என்று தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்று தமிழிலும் கொண்டாடப்பட்டவர். அவர் 1979ம் ஆண்டு விஜயவாடா வானொலியில் பேசிய ஒலிநாடாவை நான் அண்மையில் கேட்க நேர்ந்தது. அதில் தெளிவாகப் பல விஷயங்களை அருமையாகப் பேசிய அவரா குடி பழக்கத்தில் போய் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்தார் என்று நினைத்தால் வேதனைதான். அவருடைய குடும்ப வாழ்க்கையில் வந்து போனவர்கள், சினிமா எடுக்கிறேன் என்று விரல் சுட்டுக்கொண்ட அனுபவம், இருப்பதையெல்லாம் தேசத்திற்கும் சமூக தொண்டிற்கும் வழங்கினார் என்று இவையெல்லாம் ஒருபக்கம் பேசப்பட்டாலும், விதி அவர் மதியை அலைக்கழித்து முடித்து விட்டது என்பதுதான் கொடுமை. அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார் என்றும், அங்கு ரிக்ஷாகாரருக்கே ஐம்பது/ நூறு என்று கடன் பாக்கி வைத்திருந்தார் என்றால் என்னத்தைச் சொல்வது? அவர் 1981 ல் தன் 46 வது வயதில் காலமானார்.
கீழே அவருடைய இறுதிக்கால படத்தைப் பார்த்தால் அவர்தான் என்பதை உங்களால் நம்பமுடியாது. இவரைப்போல் பல முன்னாள் நடிகர்கள் குடி-போதை பழக்கத்திலிருந்து மீள முடியாமல், சொத்துகள் இழந்து போய் சேர்ந்தனர். இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு படிப்பினை!
Image may contain: 4 people, people sitting and closeup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக