About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தேவையில்லாத ஆதிமொழி குழப்பம்

'வடமொழி @ சமஸ்கிருதம் என்பது தமிழுக்கு பின்னமே வந்திருக்கும்' என்று ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக திராவிட ஆய்வாளர்களின் வாதம் இருந்து வருகிறது . ஆனால் சித்தவியல் நூல் எழுத்தாளர் என்ற முறையில் சில தகவல்களை இங்கே அளிக்கிறேன்.
1. சமஸ்கிருதம் என்பது பூமியில் பேசப்பட்ட மொழியல்ல. அது தேவ மொழி. மூத்தகுடியின் மக்கள் பயன்பாட்டில் வரவில்லை.
2.தமிழ் சித்தர்கள் எல்லோருமே இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தனர். சிவசித்தர்கள் என்றால் சிவனின் அம்சம் வந்து விடுகிறது!
3. சிவனின் ஆக்ஞேயத்தில் முருகபெருமான் தோன்ற அவன் பொதிகையில் அகத்தியருக்கு தமிழ் வடிக்க அருள் புரிந்தான். அதன்படி பார்த்தால் முருகன் வந்தபிறகுதான் தமிழ் வந்தது, குறிஞ்சி நிலமும், தமிழ் சித்த மரபும் வந்தது.
4. அகத்தியர் முதலில் பல வடமொழி நூல்களை இயற்றினார். அதன்பிறகு தமிழில் பெருநூல்கள் இயற்றினார். ஈசன் அளித்த தேனான வடமொழி நூலை பிரித்துப்பார்த்து ஆராய்ந்த பிறகு அவர் 'சௌமிய சாகரம்' இயற்றினேன் என்று சொல்லியுள்ளார்.
5. 'வடமொழிதான் தமிழ், சமஸ்கிருதம் வரவேயில்லை' என்று திராவிட ஆய்வாளர்கள் தங்கள் திருப்திக்கு சொல்கிறார்கள். வடமொழிதான் தமிழ் என்றால், அகத்தியர் அதை ஏன் மீண்டும் தமிழில் மொழிபெயர்த்து எழுத வேண்டும்?
6. சரி. அகத்தியர்தான் அப்படி என்றால், போகரும் 'ஈசருடைய மொழி' என்று தன் சப்தகாண்ட காவியமாம் போகர் ஏழாயிரத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளாரே!
7. தமிழின் தொன்மையையும் வடமொழியின் அடித்தளத்தையும் ஆராய ஆன்மிகம் இல்லாமல் வெறும் பகுத்தறிவு மட்டும் போதாது. நம் மொழி ஆய்வாளர்கள் திரித்து சொல்வார்கள் என்பதால்தான், மூத்த சித்தர்களே அதன் ரகசியத்தை தங்கள் பாடல்களில் சொல்லிவிட்டனர். அதனால் தான் நிறைய சித்த நூல்களை படிக்க வேண்டும். இல்லாவிட்டால் 'கண்டதே ஆய்வு, கொண்டதே கொள்கை' என்று இருப்போம்.
8.கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய குறிஞ்சி நில மூத்தகுடி நம்முடையதே, பேசியது தமிழே, வணங்கியது சேயோன் @முருகக் கடவுளே.
9. தொல்காப்பியரும் அதனால்தான் தன்னுடைய நூலில் வடமொழி இலக்கணம் பற்றியும் கோடிட்டார்.
10.மூத்த சித்தர்களில் யாருமே பார்ப்பனர்கள் இல்லை. வடமொழியை உயர்த்திபேச அவர்களுக்கு என்ன அவசியம்? முதலில் வந்தது ஈசருடைய வடமொழியாம் (சமஸ்கிருதம்), பிறகு முருகப் பெருமானை சிருஷ்டித்து அவர் அருளியதே தமிழ் என்கிறார்கள்.
11. 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்' என்பதால் மூத்த சித்தர் திருமூலர் இந்த திருமந்திர மாலையை வடமொழியில் இயற்றாமல் தமிழில் இயற்றினார் என்று அறியப்படுகிறது. அதனால் வடமொழியில் இந்த திருவாசக மூலநூல் இல்லை.
'மொழியை நிந்தித்தால் ஈசனையே நிந்தித்ததற்கு சமம்'. சித்தர்கள் என்றும் பொய் உரைத்ததில்லை என்பதை யாரும் உணர்வதில்லை. விஸ்வகர்மா சிருஷ்டித்த பஞ்ச வேதங்கள் சமஸ்கிருதம்தான், தமிழல்ல.
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக