About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 2 ஆகஸ்ட், 2017

நிலத்தடி நீர் குறையாமல் இருக்க...

படத்தில் உள்ளபடி 4 x 6 அடி ஆழத்தில்பள்ளம் தோண்டி அதில் காய்ந்த தேங்காய் மட்டைகளை குப்பற போட்டு அடிக்கி, பிறகு மண்ணை போட்டு மூடி விடவும். அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும். ஆழமில்லாத குழி பயனில்லை. இதனால் உங்கள் நிலத்தடி நீர் உயரும். இதை கொல்லைப்புற கிணற்றடியில் நிறுவினால் மிக்க பயன்தரும். தனிவீடு வைத்திருப்போர் கொஞ்சம் இடம் இருந்தாலும் இதை தாராளமாகச் செய்யலாம். பராமரிப்பு செலவு எதும் இல்லை.
மேஜை அலங்கார Flower bouquet கூடையில் வைத்து விற்கிறார்களே, அந்த பூங்கொத்துக்களை காம்போடு அடியில் coir pith block ல் சொருகிவைத்து நீர்தெளித்து வைப்பார்கள். அந்த நார்பொருள் 2-3 நாள் வரை ஈரம் காக்கும், பூக்களை வாடாமல் வைத்திருக்கும். அதே முறைதான் நாம் கிணற்றடியில் செய்கிறோம்.
குளக்கரையைச் சுற்றி பனைமரங்களை நட்டு வைத்தால் அதுவும் இதே வேலையைத்தான் செய்யும். ஆனால் மெள்ள வளர்ந்து வேரூன்றிய பிறகுதான் பலன் தரும். அதை சமுதாய நோக்கில் செய்யலாம். ஆனால் வீட்டிற்கு தேங்காய் நார் முறையை எளிதாகச்செய்து பயனடையலாமே.
Image result for coir pith for gardening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக