About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

முருகனின் வயது என்ன?

விஸ்வகர்மா இந்த பிரபஞ்சத்தை படைத்து, பல உயிர்களையும் சிருஷ்டித்தார். அவருடைய பஞ்சபிரம்ம புத்திரர்கள்தான் மனு, மயன், துவஷ்டா, சில்பி, விஸ்வஞர். இதில் யுக சுற்று என்பது மனு (பிரம்மனின்) கல்ப காலத்தைப் பொறுத்தே நிர்ணயமாகிறது.

பிரம்மனின் 1 நாள் என்பது 'கல்ப' காலமாகும், அது 14 மன்வந்திரம்  (மனு+அந்தரம்) கொண்டது. இந்த ஒவ்வொரு மன்வந்திரதிற்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு மனுகாலத்திலும் பல சதுர் யுகங்கள் உண்டு. மத்ஸய புராணம்படி ஒரு மனு முடிய 71 சதுர்யுகங்கள் நடக்கவேண்டும். ஒவ்வொரு சதுர்யுக (அ) மகாயுகம் என்பது கிருத, த்ரேதா, துவாபர, கலி யுகங்கள் கொண்டது. ஆக, ஒரு சதுர்யுகம் (4320000 வருடங்கள்) என்பது :

கிருத  யுகம்- 1728000 வருடங்கள், த்ரேதா யுகம் - 1296000, துவாபர யுகம் - 864000, கலியுகம் - 432000.

இப்போது  7வது  (வைவஸ்வத) மன்வந்திரத்தில் 28வது சதுர்யுகம்  நடக்கிறது. அதாவது பிரம்மனின் ஒரு நாளில் பகல் பொழுதுதான் முடிந்துள்ளது. ஒவ்வொரு மனு முடிவில் மீண்டும் பிரம்மா சிருஷ்டி பணியைத் தொடங்குவார். சிவனும் விஷ்ணுவும் அவரவர் பணிகளை செய்வார்கள். இது கூட்டுப்பணி.. பிரளயம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், நித்திய பிரளயம், யுகப் பிரளயம், அவாந்தர பிரளயம், மஹா பிரளயம் என்று பல வகையுண்டு.

இன்றைக்கு கலியுகம் பிறந்து 5018 ஆண்டுகள் ஓடியுள்ளது. இதற்குமுன் த்ரேதாயுகம் (கிருஷ்ணர் இருந்த காலம்) முடிந்துள்ளது. அதாவது, எட்டு லட்சம் சொச்ச ஆண்டுகள் முடிந்தது. அதற்குமுன் இராமர் அவதரித்தது இதே மன்வந்தரத்தின் 24வது மகாயுக ஒட்டத்தில் என்று புராணங்கள் சொல்கிறது. அப்படி என்றால் அதற்கு முந்தைய அவதாரங்கள் பற்றி சற்று பின்நோக்கிப் பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

ஈசன் தன்னுடைய நெற்றிகண்ணின் மூலம் கந்தனை சிருஷ்டித்தார் என்பது நாம் அறிந்ததே.  மனுவின்  முதல் காலமான 'சுயம்பு மன்வந்திரம்' போதே கந்தன் ஸ்ருஷ்டியாகியிருக்கலாம்(?) அந்த தொகைக் கணக்கை நம்மால் போடமுடியுமா?

போகர் ஏழாயிரம் நூலில், ஈசருடைய வட மொழி பற்றி அண்மைப் பதிவில் கண்டோம். அதன்பின் கார்த்திகேயனை படைத்து, பொதிகையில் தமிழ் படைத்து,  முன்தோன்றிய மலைவாழ் மக்களும் அவனை கடவுளாக வணங்கியதையும் நாம் பார்த்தோம். இதன்படி, ஈசனின் மொழி வந்தபின், தமிழும் வந்தது. இது ஏறக்குறைய சமகாலமாகவும் இருக்கலாம். மனுபிரம்மன் கணக்கில் இது பெரிய இடைவெளி என்பது இல்லை. சம்ஸ்கிருதமும் தமிழும் அடுத்தடுத்து சிருஷ்டியானது என்று கொள்ளலாம். முன்தோன்றிய மூத்தகுடி பேசியது தமிழ்தான், வடமொழி இல்லை. பூமியில் மனிதன் பேசியது தமிழ்தான். பிற்பாடுதான் தேவமொழி மெல்ல மக்கள் மத்தியில் வந்தது. அது எப்போது என்பது அறியோம்!

இதனடிப்படையில் தமிழ்க் கடவுள் முருகன் தோன்றி எத்தனை காலம், தமிழ் எத்தனை தொன்மை, தமிழன் தோன்றி எத்தனை காலம்,  ஆகிறது என்பதை கணக்குபோட இயலாது.

Image may contain: text

போகர் தன்னுடைய ஜனன சாகரத்தில் ஆதியில் தானே நந்தி, பிரம்மன், திருமால், இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணர் என பல அவதாரங்கள் எடுத்தார். அப்படி இருக்க  தான் முருகனாக இருந்த காலம் பற்றி போகருக்கே தெரியாதா என்ன? ஆனால் ஒரு சித்தராக ஜெனித்த போகர் மற்ற சித்தர்களைப்போல்  சுப்பிரமணியனின் வயது தெரியவில்லை, எந்த நூலிலும் மூத்த சித்தர்கள் சொல்லவில்லை என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக