About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 14 நவம்பர், 2017

சிருஷ்டியை என்னவென்பது?

கொசு நம் உடலில் அம்ரந்ததும் உடனே கடிப்பதில்லை. அது தோலின் மீது எங்கே வளமான இலகுவான நரம்பு இருக்கிறது என்பதை ஆராயும். அதன்பிறகுதான் தன் உறிஞ்சுகுழல் ஊசியைக் குத்தும். சில சமயம் தடிமனான தோலாகவோ  நரம்பு இல்லாத இடமாகவோ இருந்தால் அதன் ஊசி வளைந்துவிடும். தக்க இடம் தெரிந்ததும், சுமார் 140 வினாடிகள் வரை பொறுமையாக அமர்ந்து காலூன்றி தலைகுனிந்து அழுத்தம் தந்து உறிஞ்சும். 3 - 6mN மில்லி நியுடன்) அளவுக்கு அழுத்தம் தந்து ஊசி போடுகிறது.

அது ரத்தத்தை குடிக்கும்போது நம் ரத்தத்தில் தட்டணுக்கள் உறைந்திடாமல் இருக்க முதலில் தன் எச்சிலை அங்கே செலுத்தி, உறிஞ்சும்வரை சூடானா ரத்தம் நீர்த்து போகாமல் வைக்குமாம். அது உட்கார்ந்து துளை போடும்போது 15Hz அதிர்வலையும், குடிக்கக் குடிக்க அதிர்வலை குறைந்து 6Hz அளவுக்கு வந்திடுமாம். ஓஹோ, முக்கிய வேலையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது அது ஒலி எழுப்புவதில்லை போலிருக்கு.

அதன் 2mm நீளமான உறிஞ்சுகுழல் Proboscis முனை எப்படி இருக்கும் என்பதை நுண்பெருக்கி மூலம் படம் பிடிக்கபட்டது. நம் மருத்துவத்தில் குத்தும் syringe needle முனைபோன்றே V-வடிவத்தில் உள்ளது.  என்ன சிருஷ்டி! என்ன சிருஷ்டி!

கொசுவுக்குள்ளும் ஈசன் ஜீவனாக இருக்கிறான். 'ஓம்' என்ற சப்தத்தோடு பறக்கும்அதை அடித்தால் பாவமாகுமா? கொசு நம்மீது வந்து உடகார்ந்து கடிக்கும்போது ஓங்கி அடித்து நசுக்கினால் அது பாவமில்லை. மருந்து  புகைப்போட்டு அதை விரட்டினால் பாவமில்லை. ஆனால் அதை மின்சார bat கொண்டு 'படபட' என்று பொசுக்குவது, அதைப் பிடித்து எரியும் கொசுவத்தி சுருளின் தீயிலிடுவதும் பாவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக