About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 11 அக்டோபர், 2018

விடியல் தேசம்

ஈசனிடமிருந்து வடமொழியும் தமிழும் ஒருங்கே பிறந்தன என்று சித்தர் பாடல்கள் மேற்கோள் கொண்டு பழைய பதிவுகளில் ஆழமாக நிறைய பார்த்துவிட்டோம். நம்முடைய தென்னாடு இன்றைக்கு கடல் கொண்டது. குமரிக்கண்டத்தின் எஞ்சிய வடபகுதிதான் பொதிகைக்கு சாட்சியாக இன்றுள்ளது. கடல்கோளில் அது ஏன் அழியவில்லை? அகத்தியனின் மலைத்தேசம் நிலைக்க வேண்டும் என்பது ஈசனின் சித்தம்.
குமரி என்று ஏன் பெயர் வரவேண்டும்? குமரி என்றால் கன்னி, அதிகாலை, விடியல், இளமை, புத்துணர்வு, கற்றாழை என்று பலபொருள் கொள்ளலாம். நம் நாடு மூழ்கிய தேசத்தையும் சேர்ந்தது பகுதிதான் என்றால் பரந்துபட்ட நம் இந்தியாவுக்கு ஏன் குமரி /பாலா என்று பெயர் இருக்கவில்லை? அக்காலத்தில் அன்றைய நிலப்பிரதேசம் தூரக்கிழக்கு எல்லை முதல் ஆப்பிரிக்கவரை இருந்தது. நெடுக்கே ஏறக்குறைய ஆர்டிக் முதல் தென் இலங்கைக்கு கீழாக நெடுந்தூரம்வரை இருந்தது. சித்தர் பாடல்களில் வரும் சில பெயர்கள் இன்றைய வழக்கில் இல்லை என்பதும் தெரிகிறது. சங்க இலக்கியம் சொல்லும் நாவலன் தீவு (ஜம்பு துவீபம்), பஃருளி ஆறு, எல்லாம் குமரிக்கண்டத்தோடு சரி. ஆஸ்திரேலியாவும் அன்றைய பூகோள பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்புதான். இதெல்லாம் அவ்வப்போது பழைய பதிவுகளில் பார்த்தோம்.
எந்த பூஜையாக இருந்தாலும் அதில் சங்கல்பம் செய்யும் மந்திரத்தில் ‘ஜம்புத் துவீபே பாரத வருஷே பரதக் கண்டே மேரோ தக்ஷிணே...’ என்ற வடமொழி சொற்கள் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அதாவது, மேருமலைக்கு தெற்கே நாவலன் தீவில் பாரத தேசத்தில் பரதன் ஆண்ட பகுதியில் உள்ளோம் என்று பொருள்படும். போன சுற்று மனுவந்திரம் காலத்தின் சங்கல்ப மந்திரத்தில் என்ன references இருந்ததோ யாம் அறியோம்.
வேதங்கள் எழுதாகிளவியாக வடமொழியில் உச்சரிக்கப்பட்டு, கர்ண பரம்பரையாக அவை வந்தன. அதற்கென எழுத்துரு இருக்கவில்லை. அதனால்தான் பின்னாளில் தொல்லியல்துறை தோண்டி எடுத்த அண்டா/குண்டா/பானை ஓடுகளில் வடமொழியும் தமிழும் பொது பிரம்மியில் எழுதப்பட்டிருந்தது. வேதங்களிலேயே முருகனைப்பற்றிய குறிப்பு உள்ளது என்றால் இரண்டு மொழிகளும் ஆதி மொழிகளே. ஒன்று வடிவம் இல்லாத உபதேச மந்திரமொழி. இன்னொன்று வடிவம் பெற்ற மனுமொழி. வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் குமரிகண்ட எல்லை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது ‘ஜம்பு துவீபத்தின் வடக்கே உதயகிரி சிகரத்தில்தான் சூரியன் (பானு) தன் ரதத்தை செலுத்தத் துவங்கி, அரை சுற்று முடித்து மேற்கே அஸ்தம கிரியில் மறைகிறான்’ என்பதுதான் அந்தக் குறிப்பு. பிறகு அரைசுற்று முடித்து பனிமலை மேருவை வலம் வந்து மீண்டும் உதயகிரியில் எழுகிறான்.
நமக்குத் தெரிந்து The land of rising sun என்பது ஜப்பான். ஆக, அதுவும் நம் தேசத்தில் இருந்ததுவே என்பதும் தெளிவாகிறது. அதுசரி, பாரத் என்பது பரதனின் பெயரைத்தான் குறிக்கும் என்றால் அது தவறு. பானுவின் ரதம் புறப்படும் தேசம் என்பதால் அது பா-ரதம் என்று அழைக்கலாயிற்று. நம்முடைய நாவலன் (எ) ஜம்பு துவீபம் எத்தனை பெருமை வாய்ந்தது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவு.
முதலில் வந்த மொழியைக்கொண்டே தேசம் பெயர் பெற்றது. தமிழை ஆராயும்போது வடமொழியை ஏற்றிச்சொல்வது முரணாகும் என்ற அறியாமையில் ஈசனின் மொழியை ஒரு நூற்றாண்டாக பழித்து வந்தனர். இறை மார்க்கத்திலுள்ள தமிழ்நேச அருளாளர்களும் இத்தவறை செய்து வருகிறார்கள்.
Image may contain: sky, nature and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக