About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பெயர்ச்சியும் முயற்சியும்

"அப்பறம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்குமாம்?" என்று என் நண்பர் கேட்டார்.
"அதைப்பத்தி ஏதும் தெரியாது. நான் எந்த கிரகத்தோட பெயர்ச்சி பலன்களையும் படிப்பதில்லை. அதில் என்றைக்கும் ஆர்வம் இருந்ததில்லை" என்றேன்.
"அட நீங்க வேற... ஊரே அதைப் பத்திதான் பேசுது. உங்களுக்கு தெரியாம இருக்குமா?" எனறார்.
"ஆமாம், டிவில பேப்பர்ல போடறாங்க. ஆனா எந்த கிரகம் சொந்த வீட்டுக்கு போனாலும், எதிரி வீட்ல உக்காந்தாலும், நான் அதை கவனிக்கறதில்லை" என்றேன்.
"என்ன இப்படி சொல்டீங்க?" என்றார்.
"ஆமாங்க. நம்ம ஜனனகால ஜாதக கட்டங்களைப் பொறுத்துதான் பலன்கள் அமையும். ஆயுசு முழுக்க திசையும் புக்தியும் அதுபாட்டுக்கு வந்துபோகும். நம்ம ஊழ்வினைகள் தீரும்வரை சோதனைகளும், தர்மநெறிப்படி செய்யும் நல்வினைகள் சாதனைகளையும் தரும். குரு சனி ராகுகேது, சிவனேனு அவங்கவங்க வேலைய பாக்கறாங்க. நான் தினமும் கோளறு திருப்பதிகம் படிச்சுட்டு என் வேலையப் பாக்குறேன். பெயர்ச்சிகள் நடப்பதால நான் முயற்சிகள் செய்யாம இருக்க முடியுமா? சொல்லுங்க! 

போட்ட உழைப்பு பலன் தரும்னு நாம எதிர்பார்க்கலாம் ஆனால் அதையும்மீறி முடிவு சாதகமில்லாம போனால் அது நம்மை மீறிய செயல். கூரையை பிச்சிகிட்டு கொட்டுற யோகம் இருந்தா நாம உழைக்காமலே நிச்சயம் அது வந்து சேரும் என்பதுதான் பிராப்தம். நாம என்னைக்கோ செய்த தர்மமோ அடித்தளம் போட்ட உழைப்போ, நாம சும்மா இருக்கும்போது எதிர் பார்க்காமலே யோக காலத்துல பலன் தரும்" என்றேன்.
அவர் "அது சரி. நாம கட்டுப்படுத்த முடியாது. கடவுளா பார்த்து செய்தா உண்டு" என்றார்.
அடடே, நான் சொன்னதை கப்புனு புரிஞ்சிகிட்டார். புத்திசாலி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக