About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 20 அக்டோபர், 2018

அம்பு எய்தும் திருநாள்

பழனியில் புலிப்பாணி ஆசிரமத்தில் தசரா வெகு விமரிசையாக நடைபெறும். போகர் பூஜித்த புவனேஸ்வரி அம்மனை பிரதமையில் துர்கையாக ஆவாகனம் செய்து வழிபடுவார்கள். நவராத்திரியில் தொடர்ந்து ஒன்பது இரவுகள் பூஜைகள் நடைபெறும். பத்தாம் நாள் விஜயதசமி அன்று புலிப்பாணி சுவாமிகளை பல்லக்கில் அமர்த்தி பராசக்தியின் வேலை கையில் தந்து, பழனி அடிவாரம் ஆசிரமத்திற்கு 3கிமீ தொலைவில் உள்ள கோதைமங்கலத்திற்கு அழைத்துப் போவார்கள். முருகனே அசுரன் மீது அம்பிட்டு வென்றதன் அடையாளமாக அங்கே வன்னி-வாழை மரங்கள் மீது இவர் சம்பிரதாயமாக அம்பு எய்துவார்.

Image may contain: 2 people, food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக