About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 22 அக்டோபர், 2018

நாத்திக விளையாட்டு

சித்தர் பாடல்களில் பரிபாசையாக பல தத்துவங்கள் கூறப்பட்டதை மக்கள் தங்கள் தேவைக்கேற்ப நாத்திக முற்போக்கு சிந்தனைக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். பல சித்தர்களின் மறைப்புச் சொற்களுக்கு நேரடியான பொருள்கொண்டு அதையே எதிர்மறையாக இன்றளவும் பரப்பி வருகிறார்கள். சிவவாக்கியர், குதம்பை போன்ற சித்தர்கள் சொன்னதை முற்போக்காக உதாரணம் காட்டிச்சொல்லும் விஷயங்கள் யாது?
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா, ஆகவே மறுபிறவி இல்லை.
மறுமை இல்லையென்பதால் இம்மையின் பாவங்கள் தொடராது.
வாசியோகம் வசப்பட்டால் செய்த பாவங்களை அழித்திடலாம்.
கல்/உலோக/மர சிற்பங்களை கடவுளாக தொழுவது அற்பத்தனமானது.
மந்திரம் முணுமுணுத்தால் சிலைகளுக்கு எப்படி கேட்கும்?
நாதனை உள்ளே காண்போர்க்கு தில்லையும் திருவரங்கமும் எதற்கு?
பிறப்பு/இறப்பு தீட்டு என்ற ஒன்று இல்லவே இல்லை, அப்படி என்றால் உலகே தீட்டுமயம்.
உசுப்பேற்றுவதுபோலுள்ள தத்துவங்கள் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இதையே சாக்காக வைத்து கருப்புக்கழகக் கண்மணிகள் ஆலயத்தில் நுழைந்து கைவரிசைக் காட்டுவது, சிலைகளைத் திருடுவது, பூசை அர்ச்சனை ஆராதனையை எதிர்ப்பது, சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, கோயிலுக்குள் உமிழ்வது என்று எல்லாமே நடத்துவார்கள். திருவள்ளுவரின் குறட்பாக்களுக்கே பதவுரையை மாற்றித் திரித்து எழுதிய தமிழ் சமுதாயம் அல்லவா?
மெய்யாலுமே சித்தர் பாடல்களை நாம் ஒரு பக்குவ நிலை எய்திய பிறதான் படிக்கவேண்டும். அல்லது சித்தர்களுடைய நிலை உணர்ந்து அதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை எல்லாமே நம்முடைய இயல்பான நிலைக்கு உபதேசிக்கபட்டதன்று. தவறாக பொருளைப் பரப்பினால் விபரீதம்தான்..
நம்முள் அவனை உணரும்வரை, நாம் அவனாகும் வரை நம் வழிபாடு முறைகள் அனைத்தும் சரியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக