About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஸ்காட்லன்ட் to மந்திராலயம்.

1827 வரை மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோ, மந்திராலயத்தில் சுவாமி ராகவேந்திரரின் தரிசனத்தை நேரடியாகக் கண்டதை நாம் அறிவோம். இது கவர்மண்ட் கெஸட்டில் உள்ள பழைய செய்தி.
மன்ரோ சந்ததியின் 5 ஆம் தலைமுறையினர் அண்மையில் மந்திராலயம் வந்து மகானின் சமாதியில் வழிபட்டனர். மிகுந்த பக்தி வெள்ளத்தில் எல்லோரும் தங்கள் மூதாதையர் தரிசித்த தலத்தை வணங்கினர். பிற்பாடு அருகிலுள்ள மற்ற கோயில்களுக்கும் சென்றனர்.
மன்ரோ என்ற கிறிஸ்தவனுக்கு கிட்டிய தரிசனம் நமக்கு கிட்டவில்லையே என்று வருத்தப்பட்ட அப்போதைய மடாதிபதிக்கு அம்மகான் கனவில் காரணத்தைச் சொன்னார். கடந்த யுகத்தில் தான் பிரகலாதனாய் இருந்தபோது மன்ரோ தன்னுடைய பால்ய சிநேகிதன் என்றும், அவன் கையால்தான் அதோனி தாலுக்கா மாஞ்சால கிராமம் வரிவிலக்கு பெற வேண்டும் என்பது இறை சித்தம். ஆகவே அவனுக்கு தரிசனம் தந்ததாக தெளிவு படுத்தினார்.
தன் 65வது வயதில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் காலரா நோய் தாக்கி இறந்தார். அவருடைய உடல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை (St. Marys Church) வளாகத்தில் புதைக்கப் பட்டது. அங்கும் இவர்கள் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
Image result for thomas munro 5th generation
Sir Thomas Munro
Image may contain: one or more people, people standing and outdoor  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக