About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 6 அக்டோபர், 2018

ஒரு தவறும் இல்லை!

பதிவிலுள்ள படச் செய்தியைப் படிக்கும்போது "கிறித்துவங்க இப்போ என்ன புதுசா கொளுத்தி போடறாங்க?" என்ற எண்ணம்தான் வரும். சமீப காலமாக ஹிந்து கடவுளையும் ஹிந்துக்களையும் வசைமாரி பொழிந்து கேலி பேசும் கிறித்தவர்களைக் காண்கிறோம். இன்றைய கொந்தளித்த நிலையில் இதைப் பார்க்கும்போது "என்ன துணிச்சல் இருந்தா இப்படி போடுவானுங்க?" என்று கோபப்பட தோன்றும்.
ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நிலவியது என்ன? முற்போக்கு எண்ணங்களும், ஆரியர் எதிர்ப்பு, வேதம்/சமஸ்கிருதம்/பிராமணர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் ஏழை பிராமணர்களை புறக்கணித்த சமுதாயம் இருந்தது. தமிழகத்தில் பெரியார் இயக்கம் காலூன்றி இருந்தபோது, இவர்களுடைய வளர்ச்சியை எல்லா வழியிலும் தடுத்தனர். ஒரு கட்டத்தில், வேறு வழியில்லாமல் மதராஸ் மாகாணத்தில் பள்ளிக்கல்வி வரை படித்த வறுமையில் வாடிய பிராமணர்களை கிறிஸ்துவ மிஷனரிகள் அணுகியது. "மேற்படிப்பு தருகிறோம், நல்ல எதிர்காலம் அமைத்துத் தருகிறோம், உன் பெற்றோருக்கு வேண்டிய உதவி செய்து கொடுக்கிறோம், எங்கள் மதத்தில் சேர விருப்பமா?" என்று கேட்டன.
இவர்கள் அப்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு மதம் மாறினார்கள். ஏதோ, வறுமையில் இருந்த பிற தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் மதம் மாறினார்கள் என்று நினைக்க வேண்டாம். பிராமணர்களும் மாறினர். இவர்கள் பிற்காலத்தில் சர்வகலாசாலை துணை வேந்தர்களாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, கல்வியாளராக பரிமளித்தனர். அக்காலத்தில் இப்படி எல்லாம் நடந்தைப் பற்றி சொன்னவர் காலஞ்சென்ற டாக்டர். மால்கம் ஆதிசேஷய்யா.
இப்படியொரு நிலை இருந்துள்ளது என்பது நமக்கே ஆச்சரியத்தைத் தரும். உடுமலைபேட்டை சங்கர் கொலை முதல் அண்மையில் தேனியில் நடந்த அருந்ததி கற்பழிப்புக் கொலைவரை நம் சமூக ஊடங்கங்களில் 'மேல் ஜாதியினரின் அராஜகம்' என்று தலைப்பிட்டு அம்பேத்கர்/ பெரியார்/ முற்போக்கு இயக்கங்கள் பிராமணர்களைத்தான் ஏசுவதை பார்த்துள்ளேன். அதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதுபோன்ற சாதி மறுப்பு கொலைகளில் கைதான முக்குலத்தோர், கவுண்டர், முதலியார், ரெட்டியார் எல்லோரையும் பிராமணராக கருதி அங்கே விமர்சனங்கள் போடுகிறார்கள். ஆக, இப்படி இருக்கிறது இன்றைய நிலை!
போர்த்துகீசியர் காலத்தில் வேளாங்கண்ணி மாதா தரிசனம் தந்த காலத்தில், தேவாரம் பாடல்பெற்ற தென்னாட்டு தலங்களில் எல்லா ஜாதி ஆண்களும் குடுமிதான் வைத்திருந்தனர். அப்படியான ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கலாம். அதைப் பார்த்து விட்டு 'மேரி மாதாவிடம் ஒரு பிராமணன் யாசகம் கேட்பதாக சித்தரிப்பது தவறு' என்று பல அமைப்புகள் திடீரென வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளது. இதை பெரிது படுத்தாமல் விடுவதே நன்று.

Image may contain: one or more people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக