About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 6 மே, 2017

வடுக செந்தூர் வேலாரே!

திருப்போரூர் கந்தசாமி கோயில். இது சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

இத்தலத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் முதலானோர் வந்து முருகனை வழிபட்டுள்ளனர். சூரபத்மனை மூன்று இடங்களில் நின்று போரிட்டான். திருபோரூர் - விண், திருபரங்குன்றம்-நிலம், திருச்செந்தூர்-கடல். அழித்த பின்னர் தோஷம் நீங்குவதற்கு முருகன்  இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமானை வணங்கியதாகவும் வரலாறு சொல்கிறது. இது சுயம்பு கந்தசாமி. யத் தளத்தை 'சமராபுரி' என்று கந்தசஷ்டி கவசத்தில் பாலதேவராய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு சிதம்பர சுவாமிகளின் சமாதி உள்ளது.

முருகன் சில ஆண்டுகளுக்கு முன் என் கனவில் 'வடுக செந்தூர் வேலாரே' என்று ஒரு பாடலின் ஈற்றடியை காண்பித்தான். அதுவரை அது திருப்போரூர் என்று எனக்குத் தெரியாது. பின்னர்தான் முகத்தில் வடுவுள்ள முருகன் கோயில் எது என தெரிந்துண்டேன். அங்கு தரிசிக்கப் போனபோது அங்கு கோயில் அர்ச்சகரை கேட்டறிந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக