About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

வெயிட்டான' காது!

எங்கள் ஊரில் மூதாட்டிகள் இதுபோன்ற காதணிகள் அணிந்தனர். வீடுதோறும் வந்து நெய் காய்ச்சித் தந்த சில பிரிவினர் இதை அணிந்திருந்ததை என் சிறுவயதில் பார்த்துள்ளேன். சாமிக்கு நேர்ந்துகொண்டு செய்த இப்பழக்கம் இப்போது மிக அரிது.

கொப்பு அள்ளி முடிந்த நரைத்த தலை, கையில் பச்சை குத்தி, காதுகளில் பெரிய அளவு பாம்படம் தண்டட்டி தொங்கவிட்டு, எஞ்சிய சிறிய காதோலை ஒன்னப்பூ வகையறாவை மாட்ட இடம் போதாத நிலையில் இருந்த காலமும் உண்டு. ஆப்பிரிக்கப் பழங்குடி பெண்களைப் போல் இவர்களும் காது வளர்த்தனர். வெங்கலம், தங்கம் உள்ளே அரக்கு ஊற்றி இதுபோன்ற வடிவங்களை மாட்டிக் கொண்டனர். 

நாம் குழந்தையாக இருந்தபோது காது குத்தி அதில் தங்கக் கம்பி/ தொங்கட்டான் பூட்டி, கையில் வெள்ளிக்காப்பு/ வேம்புக்காப்புப் போட்டு, இடுப்பில் நாய் காசும், அத்துடன் தாயத்தில் காய்ந்த தொப்புள் கொடியும் அடைத்து அரைஞாணில் அணிவித்தனர். காது சோனையில் துளை வடிப்பது எளிது என்றாலும் அது பெரிய விஷயம்தான்! ஆனால் இந்தப் பாட்டிகளின் 'பேப்பர் வெய்ட்' காதணிகளோ நமக்குப் பிரம்மிப்பைத் தரும்.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக