About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

மிரட்டும் சிகை அலங்காரம்!

அக்காலத்தில், சமைந்த பெண்ணுக்கு 10-15 வயதிலேயே திருமணம் செய்து வைப்பது வழக்கத்தில் இருந்தது. அவள் சிறுபெண்ணாகத் தெரிவதால், வாலைக்குமரியாகவே பாவித்து அவளுக்குத் தலை அலங்காரம் செய்வார்கள். நெற்றிச்சுட்டி, ராக்கொடி, சூரிய சந்திரர், ஜடைவேணி, குஞ்சம் என சகலமும் தலைமுடியில் வாகாய்த் தைத்து விடுவார்கள். 

இக்காலத்தில், மணப்பெண்ணுக்கு 25 - 35 வயதில்தான் திருமணம் நடக்கிறது. மேற்படி அலங்காரம் சினிமா பாணியில் மாறுபட்ட விதமாய்ப் பியூட்டி பார்லர் பெண் செய்து விடுகிறாள். அலங்கார ஜோடனைகள் சம்பிரதாயப்படிதான் செய்வாள் என சொல்வதற்கில்லை. அவள் வாலையை அறிவாளா, கோதையை அறிவாளா? 

இப்படத்தில் மஹா'கனம்' பொருந்திய மணப்பெண்ணுக்குச் செய்த அலங்காரம் விசித்திரமாய் உள்ளது. பூஜடைப் பின்னலில் உள்ள பெரிய நாகம் எதேச்சையாகச் சொருகி இருப்பதுபோல் தெரிந்தாலும், அது அவளுடைய நாகதோஷத்தையோ / நாக கன்னிகையின் மறுபிறவியாகவோ வெளிக்காட்ட வாய்ப்பு உள்ளது. எதுவும் காரணமின்றி அமைவதில்லை. நம் அண்மைப் பதிவில்தான் இப்படிப்பட்ட என் வாசகியின் சரிதத்தைப் பார்த்தோம். 

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக