About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 27 செப்டம்பர், 2017

எந்த உருவில் வருவார்கள்?

சித்தர்களின் தரிசனம் வேண்டி பலபேர் சதுரகிரிக்கு சென்று வருவார்கள். அப்படித்தான் அண்மையில் பெரம்பலூரைச் சேர்ந்த என்னுடைய வாசகர் திரு.சிவகுமார் தன் நண்பரோடு போய்வந்தார்.
அங்கே தாணிப்பாறை பூங்கா முன்பு நின்று திரு.சிவகுமாரை அவர் நண்பர் தன் மொபைலில் படம் பிடித்தார். நின்று நிலைத்து எடுத்தும் முதல் முறை எடுத்ததில் தெளிவில்லை. இரண்டாம் முறை தன் கை அசைக்காமல் எடுத்தும் தெளிவாக விழவில்லை. அதில் புகையோட்டமும் மின்னல் கீற்றுபோல் குறுக்கீடு ஏதோ உள்ளது என்றார். அதற்கு என் நண்பர் 'என்னத்த எடுக்குற? இப்போதாவது சரியாக எடு' என்று கோபித்து கொண்டாராம். மூன்றாவது முறை எடுத்தது சரியாக வந்தது.
அந்தப் படங்களை எனக்கு அனுப்பி கருத்து கேட்டார். சூறாவளி சுழல்காற்று வீசாத, தெரு விளக்கு எரியாத அந்தப் பொழுதில் இப்படியொரு விசித்திர படம் வர சாத்தியமில்லை. முதல் இரண்டிலும் சிறிய மின்னல் கோடுகள் இவர் அருகே வந்து சுழன்று போயுள்ளது. அது சித்தர்களே என்று அவரிடம் சொன்னேன். இருமுறையும் படம் பிடிப்பதை தடுத்துள்ளார்கள். போனால் போகிறது என்று மூன்றாம்முறை அனுமதித்தது தெரிகிறது.
சித்தர்கள் எந்த ரூபத்திலும் வருவார்கள். உங்களை கண்காணிப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக