About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

பல்லாவரம் to கீழடி

சென்னை ஜமீன் பல்லாவரம் (மீனம்பாக்கம் சமீபம்) பகுதியில் 57 ஏக்கர் நிலப்பரப்பு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம் பகுதிகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment and Validation) Act, (AMASR) 2010 சட்டம் இங்கு அமலில் உள்ளது.
இதன்படி வீடுகள் வாங்கவோ, மறு சீரமைப்பு செய்யவோ, நிலம் வாங்கவோ, விற்கவோ, புதிய கட்டுமானங்கள் எழுப்பவோ, மின்சாரம் இணைப்பு தரவோ அனுமதியில்லை. இவை Megalithic sites என்ற கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்படும்.  
இந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. அங்கு பல தலைமுறைகளாய் குடியிருப்போர் தொல்லியல் துறையின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துள்ளனர். அரசு என்ன கொடுக்குமோ அதை பேசாமல் வாங்கிக்கொண்டு போவதை மக்கள் விரும்பவில்லை.
நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த ASI துறையினரைத் தடுக்க, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் சுமார் பத்தாயிரம் வீடுகள் உள்ளது. எல்லாம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜமீன் பல்லாவரம், கீழடி, ஆதிச்சனல்லூர், அரியலூர் போல இன்னும் பல இடங்களில் தோண்டத் தோண்ட புது பொருட்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். ஏதோ ஒரு sample பகுதியை ஆய்வுக்காக வைத்துவிட்டு மற்றதை விட்டுவிட வேண்டியதுதான்.
அருங்காட்சியகம் முழுக்க இதுபோன்ற பொருட்கள் நிரம்பிக் கிடக்கிறது. சிலது இடமின்மை காரணமாக பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. பழங்கால தமிழர்களின் நாகரிகம் அறிந்து கொள்ள தற்போது வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது. இவற்றை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன நன்மை? அதனால் நாம் பயனடைவது என்ன? Past comes to haunt Pallavaram என்கிறது The Times of India.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடம்பற்றி முதன் முதலில் பிரிடிஷ் நில அமைப்பியலாளர் ராபர்ட் ப்ரூஸ் அறிவித்தார். இத்தனை வருடங்கள் இல்லாமல் அண்மைக்காலத்தில் திடீரென பழங்கால நாகரிகம் பற்றிய ஆர்வம் பொங்கி வந்துள்ளது.
தமிழர் நாகரிகம் குறித்து சங்க இலக்கியங்கள் நிறைய சொல்லி விட்டது. புதிதாக என்ன இருக்கு? இத்தனை வருடத்தில் உங்களில் எத்தனைப்பேர் Govt. Museum சென்று ஆர்வத்தோடு எல்லாம் பார்த்து இருப்பீர்கள்? இப்பதிவு பலருக்கு அதிருப்தியைத் தரும்.
தாங்கள் வாழும் பகுதியில் இப்படி ஏதும் கிடைக்கக் கூடாது என்று கடவுளை நித்தம் வேண்டுவோர்தான் அதிகம். இதுதான் யதார்த்தம்!
Image may contain: one or more people, text and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக