About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

புது தம்பதி

ஓரினச் சேர்க்கை LGBT சம்பந்தமாக ஒரு தீர்ப்பைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டது உச்ச நீதிமன்றம்! இனி ஊரெல்லாம் ஒற்றைத் தோடு படு ஜரூராக வியாபாரமாகும். ஆங்காங்கு முகநூல் வாட்ஸப் பக்கங்களில் ஆண்களின் வலதுகாது பளபளக்க நிறைய படங்கள் பதிவேற்றம் ஆகிறதாம். மறைவாக செயல்பட்டவர்கள் இனி பகிரங்கமாக உலா வருவார்கள். புறத்தே ஒன்றுமாக, அகத்தே ஒன்றுமாக உருவம்கொண்ட மனிதர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. 'ஒரே குலம் ஒரே இனம்' 'சுதந்திர சுவாசம்' என்று பதாகைகள் ஏந்தி கொண்டாடிய தம்பதியர்கள் அதிகம் இருந்தனர். நேற்றைய டிவி செய்தியில் இதுதான் பிரதானம்.
வாசிக்கலை, நினைவாற்றல், மருத்துவ வர்மம் செயல்பாட்டிற்கு இரு காதுகளிலும் ஆண்கள் கடுக்கன் போட்ட காலம் மலையேறிவிட்டது. ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கன் /தோடு அணியக்கூடாது என்பது விதி.
அமலுக்கு வரும் புதிய சட்டத்தைக் கொண்டாடும் பிரஜைகளுக்காக ஒரு திருமண வாழ்த்து மடல்.
"ஆணும் ஆணும் நித்திய சிரஞ்ஜீவியாய்
பெண்ணும் பெண்ணும் சுமங்கலியாய்
காணும் ஓரினத்தில் தம்பதி சமேதமாய்
பூணும் வாழ்க்கையில் நீடூழி வாழுங்கள்."

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக