About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

திரிகோணவியல் மாயன் கட்டுமானம்

பிரமிட் என்றால் எகிப்து மட்டுமே என்று பலபேர் நினைப்போர் உண்டு. அப்படி இல்லை. தஞ்சாவூர் கோயில் விமானம் முதற்கொண்டு உலகில் பல கட்டுமானங்கள் மயன் காலத்து சூத்திரங்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காலங்கி போகர் கருவூரார் எல்லோருமே ‘மயன் வம்ச விஸ்வகர்மா எனலாகும்’ என்பது பல பாடல்களில் குறிப்பு உள்ளது.

பலபேருக்கு இந்த விஸ்வகர்மா என்ற பெயர் கேட்டாலே புதிராக இருக்கும். சிலர் ஏளனமாக பார்ப்பதுண்டு. நான் பார்த்தவரை, முகநூலிலேயே ஆரியர்கள் அல்லாத குறிசொல்லும் மருளாளிகள் சிலர் சந்தடிசாக்கில் விஸ்வகர்மாக்களையும் சித்த நூல்களையும் பழித்துப் பேசுவதைக் கண்டுள்ளேன். என்னதான் அருளாளர்கள் என்றாலும் ஜாதி துவேஷம், மறை எதிர்ப்பு, மொழி வெறி, சித்த நிந்தனை என்பது இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் தி.க. கட்சியினரோ என்ற சந்தேகம்கூட வரும். நாம் இதுகாறும் பாதுகாத்து படித்த சித்த நூல்கள் எல்லாமே பொய் புரட்டு என்று இத்தகையவர்கள் கிளப்புவது சகஜமாகிவிட்டது. அரசாங்க ஆவண காப்பகத்திலும், தஞ்சை சரஸ்வதி மஹாலிலும் உறங்கும் பல எண்ணற்ற சுவடிகளின் ரிஷிமூலம் நதிமூலம் கண்டறிவது கடினம். அப்படி என்றால் திருக்குறளும் இந்த சந்தேக பட்டியலில் வரும் போல! அத்தகைய அரிதான நூல்கள் எல்லாம் எப்படி யார் மூலம் அங்கு போய் சேர்கிறது, பின்னணியிலுள்ளவர்கள் யார் என்பதைப்பற்றி முன்பு விளக்கமாக ஒரு பதிவிட்டேன். சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.

ஆக்கங்கள் எல்லாமே தேவ தச்சர்கள் வழியில் வந்த பஞ்சமகலை என்பதைக் முன்பே குறிப்பிட்டிருந்தேன். முன்பெல்லாம் எல்லா அரண்மனைகளும் கோயில் கோபுரங்களும் பிரமிட் வடிவம்போல் அகண்ட விமானம் கொண்டிருந்தது. இன்றும் சீன, மலையாள கோயில்கள் எல்லாமே இதனை நன்கு பின்பற்றுகிறது. பிறகு பொருளாதாரத்தையும் இடப் பற்றாக்குறையும் கருத்தில் கொண்டு அதன் அளவு சிறுத்துப்போய் ஓரளவுக்கு இன்று நிலைத்துள்ளது. எகிப்து பிரமிட்களில் இதுவரை பல மேல்நாட்டு ஆய்வாளர்கள் இறங்கி சோதனை செய்தார்கள். அடிக்கடி Netfilx இதைப்பற்றி பறைசாற்றும். ஆனால் அவர்கள் யாரும் நம் இந்துசமய வாஸ்து சாஸ்த்திர நோக்கிலோ, வேதமந்திர சப்த அதிர்வுகள் கோணத்திலோ, புவி ஸ்படிக யந்திர பரீட்சையோ செய்யவில்லை. ஏன்? அங்கு யாரும் நம்மவர்கள் இல்லை. நம்மைப் பொறுத்தவரை ஸ்ரீசக்ரம் (எ) மேரு வடிவமே பிரமிட்தான்.

பிரமிட் என்பது உலகம் முழுக்க இருக்கும் ஒரு இயற்கை /செயற்கை கட்டுமானம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதற்கென சில விகிதாசார அளவீடுகள் ஆயாதி கணக்கியலில் உண்டு. அதுதான் காலத்தையும் பிரபஞ்சத்தையும் இணைக்கிறது. இது வெறும் கணிதம் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு விளங்காது. அதை மாயன் வாஸ்து சாஸ்திர நுணுக்க கணக்கு வாயிலாக கற்க வேண்டும். இதில் ஸ்தபதிகள் வல்லவர்கள்! காலஞ்சென்ற சிற்பகுரு வை.கணபதி ஸ்தபதி இதில் கரை கண்டவர். சுமேரியா, எகிப்து, தென் அமரிக்கா, போஸ்னியா, ஆஸ்திரேலியா, போன்ற உலகின் பல பகுதிகளில் இவை எல்லாம் சாதாரணமாகக் காணப்படும். அவர்களுக்கு நம்முடைய புராணமும் ஆதிகுடியின் மகோன்னதமும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. குமரிக்கண்டம், மூழ்கிய தேசம், புலம்பெயர்ந்த குலம் பற்றி நாம் சொல்வதை எல்லாமே கட்டுக்கதை எனலாம்! தஞ்சை விமானத்தை மிஞ்சும் பல கட்டுமானங்கள் உலகின் பிறபகுதில் வேறெங்கேனும் இருக்கலாம், அது நம் தேடலில் இந்நாள்வரை தெரியாமலும் போயிருக்கும். அந்த பிரமிட் வடிவங்களில் அப்படி என்ன சிறப்பு? எப்போதுமே பிரபஞ்ச தொடர்பில் இருப்பது, அதிலிருந்து சக்திவாய்ந்த மின்காந்த அதிர்வலைகள் குறிப்பிட்ட frequency யில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் சூரியனிலிருந்து வெளிவரும் பிரணவ ஒளியின் அதிர்வுகள் இதோடு ஒத்துப்போகும். அந்த சக்திச்சுடரின் beam அகலமே சுமார் பத்து மீட்டர்வரை இருக்கிறது. இவை எந்நேரமும் மோட்டார் போல் இயங்கிக்கொண்டுள்ளது. மனித குலத்துக்கும் இயற்கை வளத்துக்கும் தேவையான சக்தியை அளித்து வருகிறது. பூமியின் சுழற்சியால் அடியிலிருந்து வெளிப்படும் புவி எதிர்மறை சக்தியை அமுக்கிவிடும், மீண்டும் பூமிக்குள்ளேயே பாய்ச்சிவிடும் வல்லமை பெற்றது. பிரமிடுக்குள் உஷ்ணம்/குளிர் சீராக மனிதனின் மனமும் தேகமும் அமைதி பெறுவது இந்த காரணத்தால்தான். முன்னொரு சமயம் வேற்று கிரகம், பிரபஞ்சவெளி இணைப்புப் பாதை பற்றி பதிவிட்டோம் அல்லவா? அதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. சப்த சாகரங்களை சுற்றிவந்த சித்தர்கள் இவற்றின் பின்னணியில் இருப்பார்கள். வேற்று கிரகத்திலும் இதுபோல் இயக்கங்கள் உண்டு. அவை என்ன மாதிரியானது என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

Image may contain: mountain, sky, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக