About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 25 ஆகஸ்ட், 2018

சூட்சுமம் உணராதோர்

கேரளாவில் கடும்வெள்ளம் ஏற்படும் என்று போன வருடமே ஒருவர் கோள்களின் சஞ்சாரம் மற்றும் பஞ்சாங்க சூத்திரங்களை வைத்து கணித்திருந்தார். அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்று வானிலை ஆய்வு மையம் அப்போது மறுத்தது.
அண்மையில் அனைத்து வயது பெண்களும் 'சுத்தபத்தமாக' தங்கள் சௌகரியம்போல் சபரிமலைக்கு செல்லலாம். 12-50 வயது பெண்களுக்கு இனி கட்டுப்பாடில்லை என்று உச்சநீதி மன்றம் ஆணை பிரப்பித்தது. இன்றைக்கு எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் கண்டுவிட்டதால் கோள் என் செய்யும், கடவுள்தான் என் செய்யும் என்ற மூட தத்துவம் பேசி வருகிறார்கள். இவற்றை இன்னும் பின்பற்றுவது சரியில்லை என்பார்கள். ஆக, பக்தியும் உண்டு சிலசமயம் நாத்திகமும் உண்டு என்பதுபோல் சூழல் அமைந்து வருகிறது. அதை மீறிப்போனால் சாதிகள், அடக்குமுறை என்று பிரச்னை எழுப்புவார்கள்.
கேரளாவில் பாதுகாப்பற்ற அணைகளும், பராமரிப்பில் அக்கறைக் காட்டாத பொதுப்பணித் துறையும் இருப்பதால் இந்த அளவுக்கு வெள்ளச் சேதம் ஆகியது. இதில் ஆருடமும் ஐயப்பனும் எப்படி வரும்? என்று சுப்ரதீபமாக பேசும் கூட்டமும் உண்டு.
கேரளாவில் நடந்த பேரிடர் போனவருடம் கணித்த ஆருடத்தாலா? ஐயப்பனின் கோபத்தாலா? கேரள பொதுப்பணித் துறையின் அலட்சியத்தாலா? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் என்று சிம்பிளாக சொல்லிடலாம். காக்கை உட்கார பனம் விழவேண்டும் என்பது விதி.
மேற்கூறிய எல்லாமே ஒருங்கே நடந்தது. அதுதான் கடவுளின் சித்தம். பஞ்சபூதனின் சூத்திரத்தை அறியாதோர் எல்லாம் பேசுவார்கள். செரித்த உணவும் குடித்த நீரும் மலமும் சிறுநீருமாக பிரிந்து வெளியேறும் என்பது சரீர விதி. உணவு செரிக்க நெட்டை குட்டை, பணக்காரன் ஏழை, புத்திமான் முட்டாள் என்ற பாகுபாடு ஏதுமில்லை. மணமுள்ள உணவை சக்தியாக மாற்றி, துர்நாற்றமிக்க மலத்தை வெளியே தள்ளவும் உடலுக்கு எப்படித் தெரியும்? குடலில் இதை யார் பிரிக்கிறார்கள்? பிரியாவிட்டால் என்னவாகும்? உணவு உண்டு செரித்து சத்துகள் கிரகித்து அதை உடலுக்கு சக்தியாகித் தருவது யாருடைய வேலை? தன்னிச்சையாக நடப்பதா? இதற்கு விடை தெரிந்தால் அவனவன் வாயை மூடிக்கொள்வான்.
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக