About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 31 ஜனவரி, 2018

கல்வெட்டு படிக்கலாம் வாங்க..

சங்ககாலம் கிமு 4-3ம் நூற்றாண்டு தமிழ் பிராமி வடிக்கப்பட்ட கல்வெட்டு படத்தைக் காண நேர்ந்தது. மிகத்தெளிவாகப் படிக்கவும் முடிந்தது.
கணிய் நந்த அஸிரிய் இ
குவ்அன் கே தம்மம் இ
த்தாஅ நெடுஞ்சழியன் ப
ணஅள் கடல்அன் வழுத்தி
ய்கொ
...
அதுவரைதான் என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு வரியாக சுயமாகப் படித்து எழுதியது எனக்கு ஒரே சந்தோஷம்!
நாம் இக்காலத்தில் வரியின் இறுதியில் இடத்தைப் பொறுத்து முற்றுபெறும் சொல்லை எழுதுவதுபோல் அக்காலத்தில் எழுதவில்லை எனத் தெரிகிறது. பாறையில் இடமுள்ளவரை செதுக்கிக்கொண்டு போயுள்ளதால் அச்சொல் பிளவுபட்டு அந்தரத்தில் தொங்குகிறது.
இந்த கல்வெட்டு இருந்த இடம் மதுரை மாவட்டத்தின் மாங்குளம் மலைக்குகையில் கற்படுக்கை இடம் என குறிப்பு உள்ளது. செய்தி விவரப்படி, 'கணிநந்த ஸிரிய் குவ்அன் என்ற சமணத் துறவிக்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் என்பவன் இந்த கல் படுக்கையை உருவாக்கித் தந்தான்' என்றுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக