About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

மூட்டு வலி சிரப் / குளிகை


முழங்கால், இடுப்பு, தோள் பட்டை, என்று அனேக பகுதிகளில் மஜ்ஜை தேய்மானம் ஆவதால் மூட்டு வலி வருகிறது. முதுமை வரும்போது எண்ணெய் பசை குறைவதால் மூட்டில் மஜ்ஜை இறுகிவிடும். இதற்கு ஒரு சிரப் செய்முறைதான் இது.
சம அளவு (5-6 ஸ்பூன்) கொண்ட வெள்ளரி விதை, எள்ளு, ஆளிவிதை கலவையை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதோடு, துண்டு துண்டான உலர்ந்த திராட்சை 5 ஸ்பூன், 2 ஸ்பூன் புரதம் (ஜெலட்டின் (அ) கடல்பாசி) கலந்து, அதில் 200 கிராம் தேன் கூட்டி, கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். கடையில் விற்கும் ஜெலட்டின் அசைவம், அதனால் அதன் நிகரான (அகர்-அகர்) கடல்பாசி சேர்க்கலாம். இக்கலவை சிலருக்கு களி /லேகியம் போலவும் வரும். அது தப்பில்லை. சிறுநெல்லி அளவு உருட்டி உண்க.
தினம் காலை மதியம், உணவுக்கு முன் ஓரு ஸ்பூன் எடுத்து உட்கொண்டு வந்தால், எப்பேர்பட்ட மூட்டு வலியும் போய்விடும். ஜாய்ண்டுகளில் மஜ்ஜை பலம் பெறும், எலும்பு உராய்வு இருக்காது. உடல் பருமன் குறைத்துக் கொண்டால், இயல்பான உடல் எடையை மூட்டுகளின்மீது அழுத்தம் தருவது சமன்படும்.
இதை செய்வது நமக்கு சரிபடாது என்பவர்கள், அவ்வப்போது எள்ளுருண்டை, வெள்ளரி போட்டு சமைத்த கூட்டு, ஆளிவிதை (அ) பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, புரதம் உள்ள உளுத்தம் பருப்பு (அ) முட்டை உணவையும், சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலே இவை அனைத்தும் ஒரே கலவையில் உள்ளது. வராம் ஒருமுறையேனும் மூட்டுகளில் இளஞ்சூடு நல்லெண்ணெய் தேய்த்து சற்று வெயிலில் இருந்தபின் குளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக