About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 1 மார்ச், 2018

சமத்துவமா சாபமா?

சில ஆண்டுகளுக்கு முன் என் மாணவி ஒருவர் நைஜீரியாவிலிருந்து இங்கே வந்து சில மாதங்கள் தங்கி மேலாண்மை பட்டயப் படிப்பு படித்தார். கண்டம் விட்டு கண்டம் புலம் பெயர்ந்த அவரோடு பேசும்போது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவருடைய கொள்ளு தாத்தா+பாட்டி எல்லாம் காந்தி காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்த நாயுடு குடும்பம். தாத்தா அங்கு ஒரு ஆப்பரிக்க பெண்ணை மணம் முடித்தார். அவர்களுக்கு பிறந்த மகள் அங்கு குடியேறிய ஒரு முதலியாரை மணந்தார். இவருடைய மகள் (என் மாணவி) ஒரு அமெரிக்கரை மணந்தார். இவர்களுடைய மகன் கல்லூரி படிக்கும்போதே ஒரு அரேபிய பெண்ணை மணந்தார். இதுதான் வம்சாவளி விவரம்.
தன் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்தந்த ஜாதிக்கு/ தேசத்திற்குத் தகுந்த தோற்ற குணாதிசயங்கள் இல்லை என்று கூறினார். அதுபோல் புதுநோய்களும் வந்துள்ளது என்று அவருடைய தாத்தா சொல்லிவந்ததை சொன்னார். Alzheimer's disease, Parkinson, Diabetes, Autism, Paraphlegia,போன்ற பலதும் குடியேறியுள்ளதாம். ஆப்பரிக்கர், அமெரிக்கர், அரேபியர்.. இதில் எவருடைய மரபணு எப்படி மாறும் என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. மரபணுக்கள் dominant ஆக இல்லாதுபோனால் அச்சந்ததியினரில் நாயுடு, முதலியார் மரபணு அடிவாங்கிவிடும். 
அதுபோல் பாட்டன் பூட்டன் நாயுடுக்கள் வாழ்ந்த அளவுக்குக்கூட பிந்தைய சந்ததிக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் இருக்கவில்லை என்றார். அவர்கள் வாழ்ந்ததுபோல் இல்லாமல் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை கையாளும் சூழலே உள்ளது என்றார். "இத் லுக்ஸ் கிரேத் அண்ட் பியூத்திபுல், பத் வி ஆர் ஸிக் வித் மல்தி எத்னிக் ஜீன்ஸ்" என்றார். It looks great and beautiful but we are sick with multiethnic genes. எனக்குத் தெரிந்து இவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ஒருமுறை சிகிச்சைக்காக போய்வந்தார்.
நம்மூரில் ஜல்லிக்கட்டின் போது மரபணு மாறிய காளைகளையும், கறவை மாடுகளையும் எதிர்த்தும், மரபணு மாற்றிய பயிர்களை எதிர்த்தும் கோஷம் போட்டு போராட்டம் நடத்தினோம். தெற்காசிய மனித வர்க்க மரபணு இக்காலத்தில் உருமாறி செயலிழந்து வருவதை சமத்துவம் என்று சொல்லி மகிழ்வதா? மனித சந்ததிகள் எந்த வீரிய மருந்துக்கும் வேலை செய்யாமல் செயலிழந்து வருவதை எண்ணி அச்சப்படுவதா? சமத்துவ புரட்சியாளர்கள் மரபியலாளர் கிரேகர் மெண்டலின் ஆய்வுகளைப் படித்திருந்தால் இதை ஒப்புக்கொள்வார்கள். நம் நாட்டில் கோத்திரம் அறிந்து சம்பந்தம் செய்வதை இன்றும் பின்பற்றி வருகிறார்கள் என்பது அறிவுபூர்வமான உண்மை. சாதிகள் என்ற கட்டமைப்பு இதன் காரணமாக கட்டுப்பாடோடு இருந்துவந்துள்ளதும் தெரிகிறது. திருமந்திரம் படித்தாலே மரபணு சூட்சுமம் விளங்கும். திருமூலர் எல்லாவற்றையும் சொல்லிவைத்துள்ளார். அதன் முக்கியத்துவம் புரியாமல் இன்றுள்ள வர்ணத்தை/சாதிகளை முற்போக்குவாதிகள் சாடுகிறார்கள்.
ஆனால் இன்று நம் சமுதாயத்தில் கலப்புமண போக்கு ஊடுருவி தாக்குதல் தந்து வருகிறது. காதல் என்னும் சமத்துவ ஆய்வுக் கூடத்தில் இது மன்மதனின் மரபணு சோதனையா? அல்லது கார்பரேட் கலாச்சாரத்தின் சீரழிவா என்று புரியவில்லை. அதுதான் விதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக