About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


*இலக்கம் #18. இது என் மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்து வீடு. சுமார் 120 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. இன்று எங்களுடையது இல்லை.
*அப்போது இந்த வெள்ளைச் சுவர் இருக்கவில்லை. உள்ளே பத்துக்கு பன்னிரண்டு அளவில் திண்ணை இருக்கும். காவடி எடுப்போர் தங்கி ஓய்வெடுத்த காலம் அது.
*வீட்டினுள் ஐந்து படிகட்டுகள் ஏறியதும் உள்ள 6 தூண்களும் பர்மா கருந்தேக்கு.
*சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் வந்த காவேரி வெள்ளப் பெருக்கில், இந்த வீடு பாதியளவுக்கு மூழ்கியதாம்.
*இந்த கிழக்குத் தெரு வழியே காந்திஜி தெரு முனையில் உள்ள SSV சங்கர வித்யாசாலை மைதானத்திற்கு உரையாற்றச் சென்றாராம்.
*வீட்டின் முன்னே சிறிய தெருவில் 'கொடுமுடி கோகிலம்' கே.பி.சுந்தராம்பாள் தன் வெள்ளை நிற ப்ளசர் காரில் வந்து இறங்குவார். ஒரு வண்டி நின்றாலே தெரு அடைத்துக்கொள்ளும்.
*நான் பிறந்த வீடு இலக்கம் #23 விற்கப்பட்டு இன்று 'திருநீலகண்டர் சத்திரம்' என்ற பெயர் தாங்கி நிற்கிறது.
*மூதாதையர் வீட்டில் தலைமுறைகள் வசிப்பதும் அவரவர் பலாபலன் பொறுத்தே அமையும்.
*அக்கரையில் குலதெய்வம் மகாமாரியம்மன் கோயில் கொண்டுள்ளாள்.
*காலங்கள் ஓடினாலும் நம்முடைய ஆன்மா பிறந்த மண்ணையே சுற்றிவரும்.
* எத்தனை ஜெனன பூர்வீகங்கள்; எத்தனை வீடுகள், எத்தனை குலங்களில் எத்தனை உறவுகள்! நம் ஆன்மா வாழ்ந்த இடங்கள் எண்ணிலடங்காது. அதனால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
பூர்வீக ஊரில் வாழ்ந்த உங்கள் ஒவ்வொருவர் நினைவுகளும் இதைத் தட்டி எழுப்பும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக