About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

வாக்குறுதியை மீறும் ஆன்மா

ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் பாலகனாக இருந்தபோது தன் தாய்க்கு கரு வளரும் 'பிண்டோற்பத்தி' நிலைகளை விளக்குகிறார்.
"இது நீர் குமிழி போலவே 5 நாட்கள் வரை இருக்கும். அதன்பின் 10 நாட்களில் கோழிமுட்டைப் போன்று இருந்து, இரு திங்களில் அது திடப் பிண்டம் நிலையை அடையும். முதலில் தலை உருவாகும், 2ம் மாதம் கை கால்கள், 3ம் மாதம் வயிறு, 4ம் மாதம் மற்ற அவயங்கள் உருவாகி, 5ம் மாதம் பாதமும் விரல்களும், 6ம் மாதம் கண், மூக்கு காது மற்றும் நவ-துவாரங்கள் உருவாகும்”.
“அந்த சதைப்பிண்டத்தில் 7ம் மாதம் தான் ஜீவன் (ஆன்மா) வந்து நுழையும். அதுமுதல் அந்த பிண்டம் தலைகீழாகத் திரும்பும். அது தாயின் உடல்சூடில் இருந்து காத்துக்கொள்ள ஒரு பாதுகாப்பு கவசத்தினுள் இருக்கும். 8-9ம் மாதத்தில் அந்த ஜீவன் தன்னுடைய முற்பிறப்புகளை நினைவு கூர்ந்து கொண்டு, அந்த பனிக்குடத்தினுள் அருவருக்கத்தக்க மூத்திரம் மலம் இருப்பதைப் பார்த்து மனம் வெதும்பும். முந்தய கர்மவினைனால் இப்படி நரகத்தில் வாழும்படி ஆகிவிட்டதே என்று தான் செய்த ஊழ்வினைக்காக ஏங்கி மன்னிப்பு கேட்கும். இந்த பிறவியிலாவது நற்குணத்தோடு வாழ்ந்து தர்ம சிந்தனை நெறியோடு வாழ்வேன் என்று உறுதியளிக்கும். இந்த கருவறை என்ற நரகத்திலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளும்.”
“ஆனால் கருவறைவிட்டு வெளியேவந்து பூமியை முதல் முறைத் தொட்டதும் இவவுலக ஆசைகளின் பிடியில் சிக்கிக்கொண்டு அந்த மாயையில் விழுந்து விடுகிறது. தன் பூர்வ ஜென்ம பாவங்களை மறந்து அறியாமை என்ற இருளில் நிலைக்கிறது”. தன்னால் தனிச்சையாக ஏதும் செய்துகொள்ள இயலாமல் தன் பெற்றோரின் துணையைத் தேடுகிறது. தன் தவிப்பு என்ன என்று சொல்ல முடியாது திண்டாடும். மெல்ல வளர்ந்து ஆளாகியாதும் இந்த மாயை என்னும் கிணற்றில் விழுந்திட, அச்சம்மிகுந்த கருவறையில் இறைவனுக்குச் செய்து தந்த வாக்குறுதியை மீறி அதே தவறுகளைச் செய்ய முற்படுகிறது. இந்த மரணம்-ஜனனம் சுழற்சி சக்கரம் போய்க்கொண்டே இருக்கும்.
வெகு சிலரே பிறப்பின் தாற்பரியம் அறிந்து தெய்வ பக்தி கொண்டு ஒரு குருவை நாடி, சமய தர்ம நெறிகளைப் படித்தறிந்து அதன்படி வாழ்கிறார்கள். அவர்கள்தான் எடுத்த அந்தப் பிறவியோடு ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு, இறந்தபின் மோட்சம் பெற்று இறைவனுடன் கலந்திடுவார்கள்”.
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக