About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

சக்திவேல் முருகனுக்கு... அரோகரா!

சிக்கலில் முருகன் சக்திவேல் வாங்கி
சூரனை மூன்று தலங்களில் போரிட்டு
திருப்போரூர் பரங்குன்றம் செந்தூரென
விண்ணில் நிலத்தில் கடலில் தாக்கி
திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்து
சூர சம்ஹாரனாக வெற்றியைச் சூடி
பாராட்டிய இந்திரன் வாக்களித்தபடி
பரங்குன்றில் தெய்வானையை மணந்து
ஈசனும் சக்தியும் நந்தியும் விளையாட
ஈரேழு உலகமும் போற்றுமே கந்தசஷ்டி.

கனவில் ஒரு கோவிலின் சுவற்றில் செதுக்கப்பட்ட பாடல்களை வாய்விட்டுப் படிக்கிறேன், அப்போது 'வடுக செந்தூர் வேலாரே' என்று ஈற்றடியோடு ஒரு பாடல் முடிகிறது. அதற்குப்பின் தான் முதன்முதலாக 2007ல் திருப்போரூர் கோவிலுக்கு சென்றேன். இது திருசெந்தூருக்கு இணையான கோவிலாகும். கருவறை முன்பு நின்று முருகனின் மேனியை தொடும் தூரத்தில் நின்று கண் இமைக்காமல் பார்த்து தரிசித்தேன்.
சூரனுடன் விண்ணில் நின்று போரிடும்போது அம்புகள் தாக்கியதால், திருப்போரூர் முருகன் கோவிலில் உள்ள முருகனின் மேனியில் பள்ளம் மேடுமாக புள்ளி புள்ளியாக வடுக்கள் இருக்கும் என்ற விஷயம் அதுவரை எனக்குத் தெரியாமல் இருந்தது. போர் நடந்த அந்த ஊர்தான் 'போரூர்' (எ) 'திருப்போரூர்' ஆனது. சமீபத்தில் வடபழனியில் பாடல் புனைய வைத்த முருகன்,10 ஆண்டுகளுக்கு முன்பே பாடலின் ஈற்றடி உணர்த்தி கோவிலுக்கு வரவழைத்தான். சக்திவேல் முருகனுக்கு அரோகரா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக