About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

பாரம் தாங்காது பூமி

அன்றாடம் சொல்லொண்ணா குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இணையத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் பார்க்கிறோம். கலியுகம் எத்தனை கீழ்தரமாகும் என்று பீஷ்மர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. உடலால், வாக்கால், மனதால் மூன்று வகையான பாவங்களை மனிதன் செய்வான் என்கிறார். இனி காலம்போகும் போக்கில் நம்மால் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்து போக இயலுமா? பூமாதேவியால் இனியும் பாவச்சுமை தாங்க இயலாது என்று திருமாலிடம் வேதனைப் படுகிறாள்.
பல தீர்க்கதரிசன வாக்கியங்களின் சூட்சுமம்படி துர்முகி முதல் ஏவிளம்பி வருடம் வரை, இனி வரும் நாட்கள் கவலையளிப்பதாக பெருத்த பேரிடர்கள் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தர்மநெறி பின்பற்றி இருப்போர் தப்பிப்பார்கள், எஞ்சியோர் பூகம்ப நடுக்கத்திலும், ஊழி நீரிலும் காணாது போவது உறுதி. இறைவனை நோக்கி தியானிப்பது ஒன்றே தீர்வு. செய்த பாவங்களுக்கு கூலியும் தீர்ப்பும் ஏற்கும் மனோபாவம் எத்தனைபேருக்கு உண்டு? தீமையை உண்டாக்கும் கலி புருஷனை எதிர்க்க கல்கி அவதாரம் தன் ஆரம்பகட்ட பணிகளை துவங்குகிறார். விஷ்ணு மூலமாக சிவன் தன் பணியைச் செய்கிறார்.
`வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே'. -- திரு்ஞானசம்பந்தன்
உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த பிரளயக் காலத்தில், சிவபெருமான் 64 கலைகளை உடையாக உடுத்தி, பிரணவத்தை தோணியாக அமைத்து, பார்வதி தேவியுடன் அதில் ஏறினார். அப்போது அந்தத் தோணி 'சீர்காழி' வந்தது. எல்லா இடங்களும் அழிந்த நிலையில், இவ்விடம் மட்டும் அழியாமல் இருப்பதைக் கண்டு, இதுவே மூலத் தலம் என்று அம்பிகையிடம் கூறினார் ஈசன். மேலும் உமாதேவியுடன் இத்தலத்திலேயே தங்கினார். ஈசன் தோணியில் வந்ததால், 'தோணியப்பர்' ஆனார். (படம்: தோணியப்பர் - உமையம்மை)
வீட்டிற்கு ஒரு தோணி வைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வரும் போல! அதுசரி, தோணி கொடுத்து துடுப்பை மறைத்து வைத்தால்? எல்லாம் ஈசன் செயல்! 'கல்கி போட்ஸ்' கம்பனி ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? ஹஹஹாஹ்...
Image may contain: one or more people

1 கருத்து: