About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தேர்தல் நடத்தை முஸ்தீபு

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியாகிவிடும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை என்ற பெயரில் இதுகாறும் இம்சை தந்தது ரொம்ப ஓவர்.

‘தாமரைப் பூவில் அமர்ந்தவளே ‘ என்ற பாடலை ஒலிபரப்பவும், ஆண்டாள் /அரங்கன் புறப்பாடு உற்சவத்தின்போது கோயில் உள் சுற்றுப் பிரகாரத்தில் வரையப்பட்ட தாமரைப்பூ கோலங்களை அழிக்க உத்தரவிட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவை எதிர்க்க முடியாமல் உள்ளூர் காவல் துறையும் பொது மக்களும் திண்டாடினர். ‘இது என்ன பைத்தியக்கார உத்தரவு?’ என்று கோலத்தை அழித்த காவலர்களே விமர்சித்தனர். தேர்தல்வரை அனைத்து கோயிலகளிலும் தாமரை மலர் மாலையை இறைவனுக்குச் சூட்டுவது விதிமுறையை மீறும் செயலாகும் என்று ஏனோ சொல்ல மறந்து விட்டனர்.

தேர்தல் ஆணையமானது தன் கண்காணிப்புக் குழுவிற்கான நடத்தை விதிமுறை கையேட்டை இந்து சமய சம்பிரதாய கோணத்திலிருந்து சற்று விளக்கமாக இனி மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் தேர்தல் ஆணையமே கண்டனத்திற்கு உள்ளாகும். அதை எதிர்க்க ஆக்ரோஷ விதிமீறல் நிச்சயம் நடக்கும்.

மெழுகுவர்த்தி சின்னம் உள்ளதால் எல்லா தொகுதிகளிலுமுள்ள சர்ச்சுகளில் மெழுகுவர்த்தி ஏற்றுவதை ஏன் தடை செய்யவில்லை? கடைகளில் மாம்பழங்களின் விற்பனையை ஏன் தடுக்கவிலல்லை? பெரியவர்கள் தங்கள் கரத்தால் ஆசிர்வாதம் செய்வதை ஏன் எதிர்க்கவில்லை? தினமும் சூரியன் உதிப்பதை ஏன் மறைக்கவில்லை? இவை எல்லாமே விதிமீறல்கள்தானே?

இந்துக்கள் பொறுமைசாலிகள் என்பதால் ஆணையத்தில் பணிபுரியும் முற்போக்கு கழகவாதிகள் இதையே சாக்காக வைத்து விதிமீறல் என்னும் சொந்த ஆட்டத்தை விளையாடினர் போலும். கோயிலுக்குள் தேர்தல் ஆணையம் நுழையும்போது ஆணையத்திற்குள் இந்து சமய கர்த்தாக்கள் நுழையக் கூடாதா?

No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக