About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 1 ஏப்ரல், 2019

எங்கிருந்தோ வந்த கோரிக்கை...

சென்ற மாதம் Donald Peipe என்ற முகம் தெரியாத நபரிடமிருந்து எனக்கு ஈமெயில் வந்தது.

அதில், "உங்களுடைய ஶ்ரீவீரப்பிரம்மேந்திரர் நூலை ஆழ்ந்து வாசித்தேன்.  அருமை! நீங்கள் ஏன் ஶ்ரீபாத ஶ்ரீவல்லப மகானின் சரிதத்தை தமிழில் படைக்கக் கூடாது? I wish you to do so, by the will of siddhars..!!!" என்று இருந்தது.

கலியுகத்தில் தத்தாத்ரேயரின் முதல் அவதாரமான இந்த மகான் 14ம் நூற்றாண்டில் ஆந்திரத்தின் பீத்திகாபுரம் ஊரில் அவதரித்து இளம் பிராயத்திலேயே கிருஷ்ணா நதியில் ஜலசமாதி அடைந்து இன்றும் தேஜோ ரூபமாக இருப்பவர்.

இம்மகானைப் பற்றி ஆழமாக எழுத எனக்கு தற்போது சாத்தியப்படாது என்பதால் அதை எடுத்துச் செய்யும் எண்ணமில்லை.  இதுவரை எழுதியது போதும் என்று நான் நினைக்கும்போது நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத யார் மூலமாகவோ தகவல் வருகிறது. எல்லாம் போகர் சித்தம்! ஒருவேளை எழுதாமல் காலந்தாழ்த்த நேரிட்டால் போகரே என் ஆய்வுக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து, 'ஹும்... ஆரம்பி' என்று உள்மனதில் அழுத்தம் தந்திடுவார். மீண்டும் என்னை சோதிக்கிறாரோ?

Image may contain: 1 person, sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக