About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 10 அக்டோபர், 2019

சம்பவாமி யுகே யுகே!

பகவத்கீதையை முதன் முதலில் உர்துவில் மொழிபெயர்ப்பு செய்தவர் முகம்மது மெஹ்ருல்லாஹ். பிற்பாடு அவர் இந்து மதத்தைத் தழுவினார். அரபு மொழியில் முதல்முறை பெயர்ப்பு செய்தவர் பாலஸ்தீனத்தின் எல் ஃபதே. இவர் இஸ்கான் பக்தி இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தவர் சார்ல்ஸ் வில்கிநோஸ். அவரும் இந்துவாக மாறினார். உலக மதங்களில் இந்து மதம்தான் உயிரோடு இருக்கும் என்று அறிவித்தவர். ஹீப்ரூ மொழியில் முதலில் மொழியாக்கம் செய்தவர் இஸ்ரேல் நாட்டின் பெஸாசிஷன் ஃபானா. பின்னாளில் அவர் இந்துவாக மாறி இந்தியாவிற்கே வந்து தங்கிவிட்டார். ருஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தவர் நோவிகோவ். அவரும் கிருஷ்ண பக்தர் ஆனார்.
இதுவரை 283 ஆசிரியர்கள் பகவத் கீதையை பல்வேறு மொழிகளில் பெயர்ப்பு செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அல்-குரானை முதன் முதலில் பெங்காலியில் மொழி பெயர்ப்பு செய்த கிரீஷ் சந்திரசென் இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே கீதையைப் படித்துப் பாராயணம் செய்தவர்.
உண்மை இப்படி இருக்க, நம்மூர் மூடர்கள் பாசறையில் மணியும் சுடலியும் சீமானும் டேனியலும் ஜீவனம் செய்ய இன்னும் மறுப்புப் பிரச்சாரம் செய்வது நகைப்புக்குரியது. கிருஷ்ண பரமாத்மா இவர்களிடத்தும் கருணைக் காட்டி வருகிறார் என்பது நிரூபணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக