About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஷிலின் பவளக்குன்று

போகர் தன்னுடைய பெருநூலில் சீனாவிலுள்ள சுவாரசியமான ஓர் இடத்தைப்பற்றி விளக்குகிறார். அஷ்டதிசையில் பறக்கும்போது வடக்கு முகத்தில் ஒரு கானகத்தில் கடுவெளி சித்தரைக் கண்டார். காலாங்கியின் சீடன் போகர் என்று கூறி அவர் வணங்கியதும், கானகத்தைக் காணவந்த நோக்கம் என்ன என்று கேட்க, பவளக்காட்டைப் பார்க்க வேண்டுமென்று விண்ணப்பத்தை வைத்தார்.
சித்த நாதாக்கள் யாரும் அறியாத அக்காட்டில் கூறான பாறைகள் நிறையவுண்டு. குதிரையின் சிரசுபோல் பாறையின் முனைகளிருக்க ஆளை விழுங்கிடும் வகையில் நெடும் உயரத்திற்கு வளர்ந்துள்ளது என்கிறார் போகர். கதண்டு மகரிஷியாரிடம் சென்றால் பவள மலையைக் காண்பிப்பார் என்று கடுவெளி சித்தர் கருத்துச் சொல்ல, தன்னை அழைத்துச் சென்று உதவும்படி வேண்டினார். அப்படியே கதண்டு மகரிஷியும் இவருக்குப் பவளக் காட்டின் ரகசியத்தைச் சொல்லலானார்.
சீனாவின் யுனன் மாகாணத்தில் 400sqkm பரப்பளவில் உள்ள 270 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்பு மலைகளான Shilin (எ) Stone Forestஐ தான் இங்கே போகர் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட இன்னும் பல இடங்களை நான் கண்டு ஆய்வு செய்ததை பின்வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
Image may contain: plant, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக