About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 19 அக்டோபர், 2019

குவாங்சு தில்லைவனம்

நான்காம் காண்டத்தில் போகர் தென் சீனப்பகுதியை விவரிக்கிறார். எழிலான தெற்கு சீனபதியோரம் நதிகளும் ஓடைகளும் நிறைந்த ஒரு தில்லைவனம் உண்டு. ஐராவதம் போன்ற பனிமலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பல தவசிகள் வாழ்ந்துள்ளார்கள். நம் தேசத்தில் நமக்குத் தெரிந்த ஒரே தில்லைவனம் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு மட்டும்தான்.

ஆனால் போகர் சுட்டிக்காட்டும் அத்தில்லைவன பூகோளப் பகுதி இன்றைய சீனாவின் குவாங்சு பகுதியில் உள்ளது. அங்குதான் ரிஷி முனிகள் திரண்டு நின்று சிவவாக்கிய சித்தருக்கு உபசாரங்கள் செய்து கைகுவித்து நின்றிருந்தார்கள். குவலயத்தை மறந்து மூன்று யுகம் சமாதியிலிருப்பேன் என்று கூறிய சிவவாக்கியர், இரண்டு கோடி ஆண்டுக்காலம் வரை சமாதியிலிருந்து விட்டு மீண்டும் பூமிதனில் எழுந்து வந்தார் என்கிறார் போகர்.

பெரிய அளவில் வர்த்தகங்கள் நடந்துவந்த துறைமுகப் பட்டினம்தான் குவாங்சு. இங்குதான் போகர் தன் முந்தைய ஜெனனங்களில் லாவோசு @ போயாங் என்ற பெயருடன் கிமு12000 - கிமு4 வரை பன்னிரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தார். பிறகு தேசம் பெயர்ந்து இங்கே வந்தார். இந்த குவாங்சு  பட்டினத்திலிருந்து உயர்தரமான பட்டு மற்றும் வாசனாதி திரவியங்கள் ஏற்றுமதியாகி கப்பல் மூலம் நம் மாமல்லபுரம் கடல் முகத்திற்கு வந்தது. இதுதான் silk route பட்டு வர்த்தக வழி என்றானது.

மல்லனின் நீர்ப்பெயற்று துறைமுகத்திலிருந்து பாலாறு வழியே சரக்குகள் படகுமூலம் சிரமமின்றி பல்லவர் தலைநகராம் காஞ்சியைச் சென்றடைந்தது. இதன் காரணமாகவே பண்டைய காலந்தொட்டு இன்றுவரை காஞ்சியில் பட்டு நெசவு பிரசித்தம். பாலாற்றின் கிளை நதிதான் வேகவதி. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தன் பயணக் கட்டுரையில் காஞ்சியின் பெருமைகளை உரைத்ததை நாம் அறிவோம். இன்றைக்கு நாம் கேள்விப்படும் பட்டினம் என்று பெயர் தாங்கிய ஊர்கள் எல்லாமே கடலோர துறைமுகங்களாக, அதன் தொடர்புடைய வர்த்தக மையங்களாக ஒரு காலத்தில் இருந்தவை என்பதை மறக்ககூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக