About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 9 அக்டோபர், 2019

ஆய்வும் சர்ச்சையும்!

கடந்த சில தினங்களாக சுபாஷினி என்ற பெயர் செய்தியில் அடிபடுகிறது. கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்து தன் கருத்தைச் சொன்னது முதல் ஜெர்மனியில் பொது நூலகத்தில் சங்ககால தமிழ்ச் சுவடிகளைப் படித்ததுவரை அவர் தெரிவித்தவை மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது. மேற்கண்ட எந்தவொரு தலைப்பிலும்/துறையிலும் அவருக்கு முன்னனுபவம் இல்லாதபோது அவர் தன்னை எப்படி வரலாற்று ஆய்வாளராக முன்னிறுத்திக் கொண்டு கருத்தைச் சொல்லலாம் என்று முகநூல் முதல் ட்விட்டர் வரை எதிர்ப்பும் விமர்சனமும் பெருகியுள்ளது.

இன்னொரு பக்கம் அவர் தமிழர் அல்ல கழகம் சார்ந்த திராவிட வடுகர் என்றும், இத்துறையில் ஆய்வுப் பட்டம்கூட பெறாதவர் எப்படி அதிகாரபூர்வமான கருத்தைச் சொல்ல முடியும்? என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவருக்கு ‘ஒலைத்திருடி’ என்ற பட்டப்பெயரும் முகநூலில் சூட்டியுள்ளார்கள்.

ஜெர்மனியில் உள்ள சுவடிக்கட்டுகள் கடந்த 80 ஆண்டுகளாக இங்கிருந்து போயுள்ளது. அதில் தமிழ்/சமஸ்கிருதம் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ளன. சாமானியர்களால் அது திருடப்பட்டிருக்காது. தமிழ் இலக்கியம் நன்கு படித்தவர்கள் மூலமாகவோ, சித்த வைத்தியர்கள் மூலமாகவோ, பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கொடுத்திருப்பார்கள். இக்காலத்தில் சிலை திருட்டு நடப்பதுபோல் அன்றும் பெரிய வலைப்பின்னலில் இருந்துள்ளது. அகத்தியர்/போகர் மற்றும் மூத்த சித்தர்கள் அருளிய பெருநூல் காவியங்கள் அதில் போயுள்ளன. சங்க இலக்கியம் என்றதுமே வெறும் பத்துபட்டு/எட்டுத்தொகை போன்றது என்று உடனே முடிவு செய்யக்கூடாது. நான் சொல்பவை முன்னேறிய அறிவியல்/ மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த சங்கதிகள் நிறைந்த பன்னீராயிரம்/ பதினெண்ணாயிரம் மற்றும் பல. இலங்கை சீனா மலேயா மார்க்கமாகச் சென்றடைந்த மூலமும்/ பிரதியும் ஏராளம் என்று ஒரு சித்தரே என்னிடம் பல்லாண்டுகளுக்குமுன் கூறினார்.

அப்படியே உள்ளூரில் பறிபோகாத சுவடிக்கட்டுகள் இருந்தாலும் அது வடமொழியா? தமிழா? என்ற கேள்வி எழும். அது ஆரியத் திராவிடமா/ திராவிடமா/ குமரித் தமிழர் நாகரிகம் சார்ந்த நூலா? என்று பிரிக்கப்படும். அது ஆன்மிகமா/ இலக்கியமா/ முற்போக்கா என்ற உட்பிரிவும் வரும். இது நம் தமிழர் வரலாறே அல்ல என்று தீர்மானித்து, இது நொட்டை அது நொள்ளை என்று ஏதேனும் குரல் எழுப்புவார்கள். சுவடிப்பாடலில் கூறப்பட்ட கருத்து இப்படி அல்ல அப்படி என்று திருக்குறளுக்குப் பின்னாளில் உரை எழுதியோர் கதைபோல் ஆகிவிடும். அதைப் படித்து முடிக்கும்போது எந்த உரை சரி/ தவறு என்று நம்மால் உணர முடியாத அளவுக்குக் குழப்பம் நீடிக்கும்.

மொத்தத்தில் அவரவர் கட்சி/கழக நிலைப்பாடு நோக்கில் ஆய்வின் முடிவுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்துப் பேசுகிறார்கள். ஆய்வுகள் குறித்துப் பேசத் தகுதியானவர்கள் யார்? தொல்லியல் துறைதான். என்னதான் தமிழ் கல்வெட்டியல் படிப்புக்குப் பாடத்திட்டம் வகுத்த மூத்த தொல்லியலாளராகவே இருந்தாலும் அந்த ஆள் வடமொழி தெரிந்த ஆரியர் அதனால் அவன் உண்மை பேசமாட்டான் என்று ஒரு தலைபட்சமாகவே விமர்சனங்கள் இருக்கும். ஆரியனல்ல அவன் திராவிட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் தமிழுக்கு எதிரான செய்தியைப் பரப்பி உண்மையை அமுக்கி விடுவான் என்றும் விமர்சனம் எழும்.

ஆக இப்போதைக்கு வெளிநாடுகளில் இருக்கும் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும். இவர்கள் தோண்டி முடித்து சர்ச்சை தீரும்வரை கீழடியைவிட இன்னும் 2000 வருடம் பழமைவாய்ந்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைப் பற்றி நாம் தேடிக்கண்டுபிடித்துப் படிக்கலாம். கடத்தப்பட்ட சிலைகளை இன்றைக்கு மீட்டுக்கொண்டு வருவதைப்போல் சுவடிகளையும் மீட்கும் நாள் வரும். அதை சித்தர்கள் முடிவு செய்வார்கள்!
Image may contain: 3 people, people smiling, meme and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக