About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மின்னும் ஆக்கங்கள்

நாம் கையாளும் மின்னியல் சர்கியூட் எல்லாமே மிகவும் பழமையானது. ஏற்கனவே இருந்த சூத்திரங்கள் கலியின் தொடக்கத்தில் காணாமல் போனது. பிறகு ஐரோப்பிய விஞ்ஞானிகள் மூலம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. அக்கால கட்டத்தில் பாரதத்தில் இவை ஒரு சில வைத்திய குடும்பத்திற்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் அவை பெரிய அளவில் பயன்படவில்லை. எல்லாம் சிவ சித்தம். சித்தர்கள் ராஜ்ஜியத்தில் இப்போது சித்த நூல்களில் உரைக்கபட்டவை எல்லாமே அதிவேகமாகப் புலப்பட்டு வருகிறபடியால் நாம் பிரமித்து நிற்கிறோம். கீழடி கதையும் அப்படித்தான்.

தோண்டிக்கொண்டே போய் வெறும் பானை சில்லுகள், செங்கல் சுவர்கள், பாசி மணிகள், சுடுமண் சுதைகள் மட்டும் கிட்டுவது சரிபடாது. ஊரகக் கட்டுமான குடியிருப்பின் வாஸ்து வரைபடமும் அக்காலத்து பயன்பாட்டுப் பொருட்கள் ஓரளவுக்குத் தெரியவரும். ஆனால் நவீன அறிவியல் உபகரணங்கள் மற்றும் புதைந்த ஆக்கங்கள் தெரியவருவது நம் கையில் இல்லை. அதை அவன்தான் வெளிக்கொண்டு வரவேண்டும். அதுவரை இப்படியெல்லாம் இருந்துள்ளன என்று வேதங்கள்/சித்தநூல்கள் வாயிலாக நாம் தெரிந்து கொள்வதோடு சரி. மாமல்லபுர துறைமுகம் மற்றும் நகரத்தின் கடலடி அகழ்வாராய்ச்சிக்கு மீண்டும் திட்டம் போட்டுள்ளனர். ஆச்சரியமான பொருட்களும் கிடைக்கலாம் முக்கியத்துவம் பெறாதவைகளும் கிடைக்கலாம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக