About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 1 ஏப்ரல், 2019

மறுக்கப்பட்டதா?

நேற்றைய பதிவில் வர்ணங்கள் பற்றியும் ஜாதிகளின் பின்னலைப் பற்றியும் ஓரளவுக்கு விஸ்தாரமாகப் பார்த்தோம். அதில் ஒவ்வொரு வர்ணங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மிளிர்ந்தனர் என்றும் அதில் சூத்திரனே சமூகத்தின் அச்சாணியாக உள்ளான் என்பதையும் பார்த்தோம். சூத்திரன் பிரிவில் யாரெல்லாம் வருவார்கள்? மற்ற மூன்று வர்ணத்தவர்களில் வராத ஏனைய தொழிலோரும் சமுதாய ஓட்டத்தில் வெவ்வேறு பணியில் ஈடுபடும் எல்லா பணியினரும் சூத்திரர்கள்தான். இன்றைக்கு நாம் செய்யும் தொழிலை வைத்து நாம் பிறந்த வர்ணத்தை யூகிக்க முடியாது.
வேதங்களின் தாயாக கருதப்படுபவள் காயத்திரி @ விஸ்வகர்மணி. மந்திரங்களின் உயர்வான காயத்ரி மந்திரம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது பிராமணர்களுக்கு மட்டும்தானா? இல்லை. மற்ற வர்ணங்களுக்கும் உண்டு ஆனால் காலப்போக்கில் தேய்ந்துபோய் இன்றைக்கு பிராமணர் வைசியர் ஷத்ரியர் கம்மாள ஆச்சாரிகள் மட்டுமே ஜெபிக்கின்றனர். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் காலாங்கி போகர் என நிறைமொழி மாந்தர்கள் அனைவரும் நுண் சிகை/ பூணூல்/ வேதம்/ ஹோமம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நிறையவே சொல்லிவிட்டனர்.
ஆன்மிகம் எல்லோருக்கும் பொதுதானே? பிறகு ஏன் சூத்திரர்களுக்கு வேதம் ஓதுவதும் காயத்ரி ஜெபித்தலும் கட்டாயமாக்கப் படவில்லை? அது மறுக்கப்பட்டது என்று சிலர் குற்றம் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சூரியனை மறைத்து வைப்பது என்பது அறியாமை. மறுக்கப்பட்டது என்பது காரணமல்ல! வேதம் ஓதுவதும், காயத்ரி மந்திரம் ஜெபிப்பதும் உடலிலும் மனதிலும் யோக நிலையிலும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும். பிராமணர்கள் உடல் உழைப்பு என்பதை அளவோடுதான் செய்தார்கள். கடுமையாக எதையும் மேற்கொள்ளவில்லை. ஏன்? வேதம் ஒதவும் மந்திரம் ஜெபிக்கவும் யோகசக்கர ஆற்றல் செயல்பட உடல் என்னும் வாகனத்தை அழற்சிக்கு உட்படுத்தவில்லை. ஆகவே அதிகப்படியான கொழுப்பு உணவுகள் அவசியப்படவில்லை. சாத்வ குணங்களை ஒத்த உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றினர். ஆனால் ஏனைய வர்ணங்கள் அப்படி இருக்க முடியாது. அதிகப்படியான கொழுப்பும் ஆற்றல் சக்தியும் தேவைப்பட்டது.
பண்டைய ரிஷிகள் குறைவாக உண்டு அதிகநேரம் அந்த உடல்சக்தி விரயம் ஆகாதவகையில் தவம் செய்து வாசியில் நிலைத்தனர். உடலுழைப்போ அதிக நடமாட்டமோ இருக்கவில்லை. காயத்ரி மந்திரம் லட்சம் உரு, கோடி உரு ஏற்றும்போது உடலில் வெப்பம் அதிகமாகும். அகத்தீயைப் பெருக்கும் அறிவொளியாம் சூரியனை மையமாக வைத்து ஜெபிக்கபடுவதால் இந்த வெப்பவினை ஏற்படுகிறது.
சரி.. சூத்திரர்கள் வேதம் ஓதுவதோ /காயத்ரி ஜெபிப்பதோ ஏன் கூடாது? அவர்களுடைய உடலுழைப்புக்கு இது நல்லதல்ல. இதில் அதிக கவனம் மேற்கொண்டால் அது அவர்களுடைய சரீர சக்திக்கு பின்னடைவுதான். அதனால் வேதம் ஓதுவதில் சப்தகோஷ நிலைகள் மாறும்போது ஆறாதார சக்கரங்களில் மாற்றங்கள் உண்டாக்குகிறது. பெண்கள் பொதுவாகவே வேதம் ஓதுவதோ, காயத்ரி ஜெபிப்பதோ, விஷ்ணு சஹஸ்ரநாமம் வாய்விட்டு பாராயணம் செய்வதோ கூடாது என்று வைத்திருந்தனர். ஏன்? பெண்ணடிமையா? இல்லை. அவர்களுடைய உடலமைப்புக்கு எதிர்மறை விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என்று அப்போதே விஞ்ஞான ரீதியில் கண்டு உரைத்தனர். மந்திர சப்த அதிர்வுகளால் கருப்பை, மூலாதாரம், மற்றும் சுரப்பிகள் பாதிப்பு உள்ளாகும் என்பதே உண்மை. விலக்கான பெண்கள் வில்வம், துளசி, கறிவேப்பிலை செடிக்கு அருகே சென்றாலே சுத்தமாகப் பட்டுபோய் விடுகிறதே. அதுபோல்தான்!
மாமிச உணவில் கொழுப்பு இருப்பதால் அது உடலை அதிக நேரம் உழைக்க ஈடுதரும். ஆனால் அவை எல்லாம் யோகசக்கர ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும். ஆகவே, இவர்களுக்கு ஜெபமும் மந்திரம் உரு ஏற்றுதலும் பயன் தராமல் போகும். அதனால் அவர்களுக்கு பலவீனம்தான் வரும். சூத்திர வேலைகள் செய்யும் நாம் இதை எல்லாம் கனம் மாறாமல் பாராயணம் செய்தால் உடலுழைப்புக்கு சக்தி இல்லாமல் போகும். மற்றபடி கடவுளை துதிக்கவோ, பதிகம் பாடவோ, பண் இசைக்கவோ எந்தத் தடையுமில்லை.
மேற்படி செயல்களை எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து செய்யும்படி ஆகிவிட்டது. ஜெபத்தில் கண்கள் மூடியே இருக்கும், மூச்சு சீராக இருக்கும், வாய் பேசாது, உடல் ஆசனமிட்டு இருக்கும், நடமாட்டமில்லை. ஆகவே உடலுக்கு அதிகப்படியாக பளு சுமத்தவில்லை. நாம் அறிந்த ரிஷிகள் அநேகரும் பிறப்பால் பிராமணர் அல்ல. வைசியர், ஷத்ரியர், சூத்திரர்களாக பிறந்து வளர்ந்து பிறகு ஒரு கட்டத்தில் அதை விடுத்து மேற்படி பிராமணத்துவ சாதகத்தில் ஈடுபட்டு, தம் ஆன்ம சக்தியையும் யோக சித்தியையும் மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். பிராமணர்கள் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை உரைத்த விஸ்வாமித்திரர் பிராமணரா?
ஆகவே, வேதமும் /மந்திரமும் மற்ற வர்ணத்தார்களுக்கு மறுக்கப்பட்டது என்ற கோட்பாடே தவறு. ஜெபம் செய்து வேள்விகள் வளர்த்து தபஸ்வியாக வேண்டும் என்றால் தன்னை மனத்தால் உடலால் அதற்கு தயார்படுத்திக் கொண்டு முயன்றால் யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். ஆனால் அந்த வரணத்தின் அனுஷ்டானத்தைப் பின்பற்ற வேண்டிய கடமையும் உள்ளதே!
காஞ்சிபுரம் வட்டம் ஓரிக்கையில் மகாசுவாமி மணிமண்டபத்திற்குப் போகும் வழியில் வேத அத்யயன பள்ளியைப் பார்த்தேன். சொகுசு வாழ்க்கை நாம் வாழும் இக்காலத்தில் அந்தச் சிறார்கள் வேதம் படித்து உயர்வதில் நிறையவே ஆசைகளை தியாகம் செய்துள்ளார்கள் என்பதைப் உணர்ந்தேன். வேதம் கற்பதோடு மற்ற பள்ளிப் பாடங்களும் உண்டு. அங்கு தமிழை புறக்கணித்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வேதம் stream ல் specialise செய்வது போக, விருப்பப் பாடங்களாக திருமுறைகள்/பிரபந்தங்களும் உண்டு.
ஆகவே, எந்த வர்ணமாக இருந்தாலும் ஓர் ஆன்மா அந்த பிரம்மத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் அது நிச்சயம் நடக்கும். குரு தேடி வந்து உபதேசம் செய்வார்! இப்பிறவியில் நடக்காமல் போனால் மறுபிறவியில் விட்ட இடத்திலிருந்து தொடரும்.

ஞாயிறு, 31 மார்ச், 2019

பறையர் அடையாளம்

நீண்ட நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் எழுதலாமோ கூடாதோ என்ற தயக்கம் இருந்தது. சாதியைப் பற்றியோ சாதிப் பெயரை சொன்னாலோ அது கெட்ட வார்த்தைக்கு சமமான அந்தஸ்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது.

காலங்காலமாக நம் பாரதத்தில் நான்கு வகை வர்ணங்கள் நிலவி வருகிறது. அதனுள் எராளமான சாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் வரும். நாம் ஏதோவொரு வர்ணத்தை/குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உள்ளபடி பார்த்தால் பிறப்பால்- தொழிலால் -குணத்தால் எப்படியும் மூன்று வகையான வர்ணங்கள்கீழ் வருகிறோம். சமூகத்தில் சாதி என்பது அடையாளம். அதைத்தாண்டி அதைப் பிடித்துக் கொண்டு தொங்க ஏதுமில்லை. குறிப்பிட்ட ஒரு வர்ணத்திலோ சாதியிலோ பிறப்பதால் உயர்வோ தாழ்வோ இல்லை. இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நம் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் வர்ணம் interchangeable ஆக இருந்துள்ளது. பிற்பாடு அதுவே மெள்ள மாறி பின்வரும் தலைமுறைகளுக்கு பிறப்பு வர்ணம்/சாதியாக நிலைத்தது. இதைப்பற்றி விளக்க "துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை" என்கிறது புறநானூறு. ஆமாம், உண்மைதானே!

கிராமத்தில் எல்லா சாதிகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருந்தன. அதில் ஊருக்கு சுபிட்சம் கொண்டுவர ஜெபம் தபம் சங்கீர்த்தனம் மற்றும் தர்மநெறி அறிவுரை கல்வி போதனைகளைச் சொல்வது பிராமணனின் பணி. விளையாட்டு போர் பயிற்சி ஊர்காவல் துடிப்புள்ள செயல் எல்லாம் ஷத்ரியரும், உணவு தானியம் வர்த்தகம் பொருளாதரம் நிதியை கவனிக்க வைசியர்களும், கட்டளை இட்ட பணியை செய்து முடிக்க சூத்திரர்களும் இருந்தனர். இன்றைக்கு நாம் பிறப்பால் வேறு வர்ணமாக இருப்பினும் தொழிலால் எல்லோருமே சூத்திரர்கள்தான். எல்லோரும் வேலை செய்கிறோம் நமக்கு அலுவல் பணிகளை மேலதிகாரி delegate செய்ய அதை கௌரதையுடன் execute செய்கிறோம். நம் அப்துல் கலாம் பிறப்பால் முஸ்லிம் ஆனால், வகித்த பதவியால் ஷத்ரியர், ஞானத்தால்/குணத்தால்/பழக்கத்தால் பிராமணர்.

நேற்று செய்தித்தாளில் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி. "சாதி ஒழிப்பென்று கூறி தாழ்த்தப்பட்ட தலித் சமூகமென உளவியலாக பறையர்களை ஒடுக்கி விட்டனர் இன்றைய அரசியலாளர்கள். மானமுள்ள பறையர்கள் இதை புரிந்துக்கொண்டு அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வீர சோழ பறையர் நலச்சங்கம் முன்வைக்கும் ஏகமனதான தீர்மானம்!"

உண்மையில் பறையர்களின் பின்புலம் என்பது உயர்வானதாகவே இருந்துள்ளது. அவர்களுக்கு சம்புரிஷி கோத்திரம். அக்குலத்தில் சமய சொற்பொழிவாளர்கள், ஆசிரியர்கள், தானியம் பண்டகதாரர்கள், விவசாயிகள், சமுதாய அறிவிப்பாளர்கள், தூதர்கள், முரசு கருவிகள் செய்வோர், பண்ணிசை வேந்தர்கள், பக்தி இலக்கியவாதிகள், என்று பலர் இருந்தனர். எல்லோருமே வேளாளர் குலத்தில் உதித்து வந்தவர்கள். பிற்பாடு அது பிளவுபட்டு பல ஜாதிகளாக மாறிட அதில் பாதிபேர் எப்படியோ பட்டியல் சமூகத்திற்குள் போய்விட்டனர். பறையர் என்றாலே மோளம் அடிப்பவர் என்ற கருத்து நிலவி விட்டது. அதற்கேற்ப அவர்களுடைய வெளிப்புறத் தோற்றம், உணவு, பழக்க வழக்கமும், brand image போல் நிலைத்து விட்டது.

உணவு தானியங்களைப் படியால் அளந்து, செய்த வேலைக்கு (பறை அளந்து) கூலியாகத் தருபவன் எப்படி கேவலமானவன் ஆகிறான்? நாராயணன் நம் எல்லோருக்கும் பறை தருபவன் என்று முதல் திருப்பாவை பாடலில் ஆண்டாள் பாடினாளே! அதனால் நாரயணன் பறையன்தானே?
பிற்பாடு அந்த அளவையின் வாயை தோலால் பூட்ட பறை மோளம் ஆனது. ஆக இது ஆங்கிலேயர் சூழ்ச்சிக்கு முன்புவரை மோசமான வார்த்தையாக இருக்கவில்லை. பிற்பாடு திரிபு ஏற்பட்டு இன்று ஜாதிப் பட்டியலில் வந்துவிட்டது. பறையர்களே! பறையராக இருக்க பெருமைப் படுங்கள்.


புதன், 27 மார்ச், 2019

காக்கைக் கரையும்

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் பொருளை மட்டும் ஓடியோடி உழைத்துச் சம்பாதிப்பது கிடையாது, தலைமுறைகளுக்கான பாவங்களையும் சேர்த்துத்தான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் வடக்கு/வடகிழக்குப் பகுதி போர்க் களத்தில் இயங்கிய தபால் நிலையத்தில் (Advance Base Army Post office) அதன் தலைமை அதிகாரியாக எங்கள் பக்கத்து கிராமத்து ஆசாமி ஒருவர் பணி செய்தார். அங்கு மாண்டுபோகும் போர் வீரர்களின் உடைமையில் உள்ள பணத்தை சேகரித்து எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எங்கள் ஊருக்கு மணிஆர்டர் அனுப்புவார். மூன்று ஆண்டுகள் இதுபோல் ஒருவருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
யாருக்கு? ஆசிரியராகப் பணியில் இருந்த என்னுடைய பாட்டனாருக்கு. ஊரில் வேறு யோகியஸ்தன் இல்லை என்று அந்த ஆசாமி நினைத்ததால் இவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ‘வெள்ளை காக்கை’ வருகிறது என்று தபால் கார்டு போடுவாரம். இறந்தவனின் ஜோபியில் எடுத்த பணம்தான் மணியார்டராக வருகிறது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். ‘பெரியவர் பாவச்செயல் செய்கிறார் என்று தெரிந்தும், தன்னை நம்பி அனுப்பிய காசை அணா குறையாமல் கணக்கு வைத்து போர் முடிந்து விடுப்பில் அவர் ஊருக்கு வந்ததும், மொத்தமாக ஒப்படைத்து விட்டார்.
‘தம்பி, நீ மகா யோக்கியன். தேதி வாரியா கணக்கு வைத்து 1270ரூ 25அணா பணத்தை காபந்து பண்ணி கொடுத்திருக்கே. இந்தாடா உனக்கு ஒரு பத்து ரூபாய் வெகுமதி’ என்று சொல்லி என் தாத்தாவுக்குக் கொடுத்தராம். ‘அண்ணே... இந்த காக்காய் கம்பீரமா உங்ககிட்டேயே இருக்கட்டும். அதுதான் உங்க குடும்பத்துக்கு அழகு’ என்று பொடி வைத்துப்பேசி பணத்தை நிராகரித்தாராம்.
ஓய்வுபெற்ற தபால் அதிகாரி பிற்பாடு ஊருக்கு வந்து சேர்ந்ததும் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, மகோதரம், எல்லாமே ரவுண்டு கட்டி தாக்க 6௦களில் போய்ச்சேர்ந்தார். அவருடைய மனைவிக்கு தீடீரென சித்தபிரம்மைப் பிடிக்க அந்த கிழவி 8௦களில் போனார். அவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அந்த மகன் இருபது ஆண்டுகளுக்கு முன் புற்று நோயில் மாண்டுபோக, கடந்த பத்து ஆண்டுகளில் இளைய மகள்களின் கணவர்கள் மாண்டு போனார்கள். அக்குடும்பத்து பேரக் குழந்தைகளுக்கு நடந்தவை எல்லாமே வேறு மதம்/ இனம் கலப்பு மணம்தான்.
அவருடைய மூத்த மகளுக்கு இப்போது அதிக வயதாகி விட்டது. அவரும் அவர் கணவரும் நல்ல நேர்மையானவர்கள் என்றாலும், அந்தம்மாள் நடந்துகொள்ளும் போக்கு அவருடைய பேதலித்த தாயாரின் சாயலில் வருவதைப்போல் இருக்கிறது. எழுபது ஆண்டுகள் ஆகியும் வெள்ளை காக்கை தலைமுறைகளுக்கும் நின்று அழகாகக் கரைந்து தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
Image may contain: bird and outdoor

புதன், 27 பிப்ரவரி, 2019

கண்காணிக்கிறது கட்டுப்பாட்டு ஆணையம்

பழநி மலையில் முருகனை தண்டாயுதபாணியாக நவபாஷாணத்தில் வடித்தபோது போகருடைய கோஷ்டியில் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் புலிப்பாணி சித்தர்களும், கோரக்கரும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மூத்த சீடர் சிவலிங்க தேவ உடையார் 'புலிப்பாணி பத்திர குருசுவாமி' என்ற பட்டம் ஏற்றபின், சில காலங்கள் கழித்தே இளையவர் நைனாத்தே தேவ உடையாரை போகருக்கு அறிமுகம் செய்கிறார். 'இவன் பக்திமான், லோக சிந்தனையும், பூசை நெறிகளையும் வைத்திய முறைகளையும் தங்களிடம் இருந்து கற்க ஆவலோடு வந்துள்ளான். இவனையும் தாங்கள் ஏற்கவேண்டும்' என்று சிபாரிசு செய்கிறார்.
சீனம் போய்வந்தபிறகு தன்னுடைய சப்தகாண்டமாம் போகர் ஏழாயிரம் நூலை யாருக்காக இயற்றினார்? அது இளைய புலிப்பாணி சுவாமிகளுக்கு. பழனியில் குகை சுரங்கத்தின் உள்ளே சென்ற போகரை, புலிப்பாணியும் கோரக்கரும் சமாதி வைத்தபின், வெளியே வந்து சமாதி குகையின் நுழைவாயிலை அடைக்கிறார். சிறிது நேரத்திலெல்லாம் கோரக்கர் நாகையில் பொய்கைநல்லூர் தலத்தில் போய் சமாதி கொள்கிறார். அங்கே வந்து அவருக்கு சமாதிக் கிரியைகளை செய்ததும் போகர்தான். பிறகு அவர் சீனதேசதிற்குப் பறந்து விடுகிறார். அங்கே ஜெனித்தபின் தன் நாட்டு பிரஜைகளை எதிரிகளிடமிருந்து காக்க மன்னனாக பரிபாலனம் செய்யப்போவதை கோரக்கரிடம் சொல்லியுள்ளார். இதை சந்திர ரேகையில் வெளிப்படுத்தியுள்ளார். இன்றுவரை அந்த கடைசிக் கட்டத்தில் நிகழ்ந்தது என்ன என்பதை கோரக்கர் சொல்லாதவரை யாரும் அறியார்.
'நான் சமாதி கொண்டபின் சில காலங்கள் பூமியில் இருந்துவிட்டு நீயும் உடனே சமாதியில் அமர்ந்திடு. கலிகாலம் கேடுகெட்டது. அது உன்னையே பாழ் செய்யும்' என்று போகர் தன் இளைய சீடர் புலிப்பாணியிடம் உரைக்கிறார். அதன்படி புலிப்பாணியும் அடுத்து பிரவேசம் செய்ததாக அறியப்படுகிறது.
அதன்பின் இடைப்பட்ட சுமார் 13 நூற்றாண்டுகளில் குரு போகரும் சித்தர் புலிப்பாணியும் எண்ணற்ற ஜெனனங்களை எடுத்து கெடு கலியின் கடுமையைக் குறைத்து சித்தர்களின் ராஜ்ஜியத்தை நிலைநாட்ட தேசம் முழுதும் எங்கோ இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதில் சில ஜெனங்கள் மட்டுமே நமக்குப் புலப்படும். கலியுகத்தில் ஆன்மாவின் ஊழ்வினைப் பயனாக துன்பங்கள் மிகுந்து விடுவதால், அதை மட்டுப்படுத்த வருகிறார்கள்.
கலியில் பாவமூட்டைகள் சுமந்த ஆன்மாக்களே உலகெங்கும் நிரம்பி உள்ளதால் பேராசை கோபம் பொறாமை பகை என்ற வட்டத்திற்குள் சிக்கி வருகிறது. அவன் தாள் பணிந்து சிந்திக்க ஆன்மாக்களுக்கு அவகாசம் கிடைக்காமல் போகின்றது. அப்படியே கோயிலுக்குப் போனாலும், சிவபுராணம் படித்துகொண்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு எல்லா அட்டகாசங்களும் அரங்கேறும் காலமிது. 'நிற்க அதற்குத் தக' என்பதை உணர்வதில்லை.
ஈசனின் தயை இருந்தால் மட்டுமே பிறவிப் பாவங்கள் முற்றிலும் தள்ளுபடியாகும். நமக்கு விட்டகுறை இருந்தால்தான் சித்தர்களின் ஸ்பரிசம் நம்மீது பட்டு பாவங்கள் நிவர்த்தியாகும். சித்த புருஷர்களும் எண்ணற்ற மகான்களும் நமக்கு மந்திர உபதேசமும் தீட்சையும் வழங்குவார்கள். அவர்கள் ஆசியுடன் அவர்கள் இட்ட கட்டளைப் பணிகளை முடித்ததும் நாம் வந்த வேலை முடியும். நாம் அவனிடம் ஒடுங்கும் தருணத்தை அவர்களே அறிவார்கள்.
'சட்டுபுட்டுன்னு சமாதிவிட்டு வெளியே வந்து அராஜகம் செய்யிற ஆசாமிங்களை துவம்சம் செய்து தர்மத்தை நிலை நாட்டணும். நம் கண்ணுக்கு எப்போது தெரிவாங்களோ? அதுவரை இருப்போமா?' என்று உங்கள் மனம் இக்கணம் நினைப்பதை உணர்கிறேன். கோரக்கர் சமாதியில் சிவலிங்கம் பளபளக்க வெளிப்படும் நேரம் கனிகிறது.
No photo description available.

புதன், 2 ஜனவரி, 2019

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இது வேலைக்கு ஆகுமா? வர்த்தகர்களும் மக்களும் திடீரென தங்களை மாற்றிக்கொள்ள முடியாததற்கு வாழ்க்கைச் சூழல்தான் காரணம். கடந்த 25 ஆண்டுகளில் மாறியதை மீண்டும் உதறிவிட்டு வீட்டையே புரட்டிப்போட சாத்தியப்படுமா?
படத்திலுள்ளவை எல்லாம் இன்னும் எங்கள் வீட்டில் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எண்ணெய் தூக்கு, பனையோலை விசிறி, இலைச் சருகு, வாழையிலை தொன்னை, மெட்டல் டார்ச், புடைக்க முறம், கூஜாவில்தான் 92வரை பால் வாங்கி வந்தேன், என் பாட்டி பித்தளை சோப்பு டப்பா வைத்திருந்தார். பயன்படுத்தாததை பரண்மீது போட்டு வைத்துள்ளோம். மீண்டும் அவை பிரவேசிக்கத் தயாராகிறது.
இன்றைக்கு பாக்கு மட்டை பொருளைவிட, மந்தார / வாழை இலை பொருட்களே விலை மலிவு. ஊருக்குப் போகும்போது கூஜாவில் போய் நீர் நிரப்பிக் கொள்வது சுகாதாரம் இல்லை. நாம் அன்றாடம் பாக்கெட்டில் இங்க் ஊற்றிய Fountain பேனாவை கொண்டுபோக முடியுமா? சூப்பர் மார்கெட்டில் இனி எல்லாமே மூட்டையில் விற்பனை ஆகவேண்டும். பொறி்கடலை கடையில் முன்பெல்லாம் வண்ணம் பூசிய கூடைகள் இருந்தது போல் மீண்டும் வரவேண்டும். அரிசி இனி சாக்கு மூட்டையில்தான் வரவேண்டும். பால் பாக்கெட், மற்றும் இதர PET பாட்டில் கண்டைனர்களை உடனே அப்புறப்படுத்த முடியுமா? இந்த திடீர் மாற்றத்தால் பல பொருட்களின் விலை உயருமா குறையுமா? மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள் மட்டும் பரவாயில்லையா? அது மட்டும் எதற்கு? 
ஒரு தலைமுறை முழுக்க பிளாஸ்டிக்கோடு வளர்ந்து விட்டோம். இனி எல்லாவற்றையும் மாற்ற தனியொரு சூத்திரம் இயற்ற வேண்டும். நவீனம் போய் இனி மீண்டும் பாரம்பரிய முறைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க சாத்தியமா?
ஆரோக்கிய உணவை மட்டுமே உண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு மரபணு மாற்றிய பழங்கள், உரம் போட்ட தானியங்கள், காய்கறிகள்தான் உண்கிறோம். அஸ்திவாரமே ஆடிவிட்டது, இப்போது விழித்துக் கொண்டு என்ன செய்ய? நாள்பட்ட ஆமம் நீங்க பேதி போவதுதான் ஒரே வழி. அதற்கு உடலை தயார் செய்ய வேண்டும்.
No automatic alt text available.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கலைஞரின் 'தமர் உகந்த' திருமேனி!

ஸ்ரீஇராமானுஜரின் தாசராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் கலைஞர். இவருடைய தீவிர வைணவ பக்தியை பகிரங்கமாக ஏற்கும் விதமாக, மார்கழித் திங்கள் முதல் நாளாம் இன்று நவமி திதி முடிந்தபின், தசமியில் கலைஞரின் சிலையை மாலையில் திறக்க ஏற்பாடு செய்த திருக்கழக ஆச்சாரியார்களின் அதீத பக்தியை மெச்சினோம். இது வைணவத்திற்கு கிட்டிய பேறு. ஓம் நமோ நாராயணாய!

புதன், 5 டிசம்பர், 2018

நெல் ஜெயராமன்


Image may contain: 1 person, standing and outdoor

தனியொருவனாய் களமிறங்கி 
தன்னலமில்லா சேவையாற்றி 
தனிப்பெரும் நெற்களஞ்சியம் 
தேடிப்பிடித்த நெல்லண்ணலே
துஞ்சாமல் அலைந்து உழைத்து
துடிப்புடன் ரகங்களை சேகரித்த
தன்னிகரில்லா மைந்தனே இத்
தமிழகம் உன்னை மறவாது
வாழ்வாங்கு வாழும் நின் புகழ்!
வானோர் உலகில் இளைப்பாறு!










பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை  நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார். 

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

திவ்ய ரூபம்

தெலுங்கில் அவனைப்பாட இப்போது உதித்தது...
"ஆரத்தி காட்டும்போது கன்னத்தின் குழிகள் ஈர்க்கிறது, உன் சிரிப்பில் விரியும் பலாப்பழம் இனிக்கிறது, வண்ணமிகு வாசனை திரவியங்கள் மணக்கிறது, குவித்த பூவிதழ் உதடுகள் மிளிர்கிறது, உன் சிலையில் வழியும் பிரசாதம் அதிமதுரம், உன்னருளால் இயற்றிய பாடல் அதி விதுரம்."
Image may contain: text

பிரம்மாண்டமாய்...

கேளிக்கைகாக கனவுலகில் அதிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டது 2.0 படம். இதற்கான செலவு ரூ.550 கோடி என்று சொல்லப்படுகிறது. வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி இன்னும் அதிக பட்ஜெட் செலவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படம் வரும் நிலை உள்ளது.
அண்மையில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்ட மிக கனமான GSLV Mark 3 ராக்கெட் தயாரிக்க ஆன செலவு ரூ.400 கோடி. வணிக நோக்கில் செய்தால் ஆயிரம் கோடியில் மூன்று ராக்கெட்கூட செய்து முடிக்கலாம் என்கிறது இஸ்ரோ.
ஆக, இந்தியா செயற்கைக்கோள்களை ஏவும் செலவைவிட, இங்கே கேளிக்கை சினிமா எடுக்க ஆகும் செலவு உயர்ந்து வருவது ஆரோக்கியமான சூழலைக் காட்டுகிறது என்று இதை வைத்து நம் பொருளாதாரத்தை கண்மூடித்தனமாய் சொல்லிட முடியாது என்பதே உண்மை. படம் எடுக்க ஆகும் செலவைப் பொறுத்து இனி சினிமா டிக்கெட் விலை நிர்ணயமாகும் என்று வந்தாலும் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு திரையரங்கின்முன் பேனர் கட்டவுட், பாலாபிஷேகம், ஜிகினா தோரணங்கள், இனிப்புகள் விநியோகம், பட்டாசு வெடிக்க ஆகும் செலவுகள் ஆகியவை ரசிகர் மன்றத்தைச் சேரும்.
படத்திற்கு ரூ.50 கோடி குறைவின்றி சம்பளம் வாங்கும் நடிகர்களின் படத்தை ஓடவைக்க ரசிகர்களாகிய நாம் ரூ.100 முதல் 200 வரை டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதோடு, முதல்நாள் புதுப்பட ரிலீஸ் விழாவும் எடுக்கிறோம் என்றால் நாம் பணக்கார ஏழைகளா? தமிழன்டா!
Image may contain: 1 person

சனி, 1 டிசம்பர், 2018

குற்றத்தில் பெரியது என்ன?

சமீப நாட்களாக தினமும் செய்தித் தாளைப் படித்தாலே கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதை செய்தவர்களின் பின்னணியும் திகிலூட்டுகிறது. மீண்டும் அதே குற்றவாளிகள்தான் இதில் ஈடுபடுவது தெரிகிறது. தடயம் கிட்டாத வகையில் கைத்தேர்ந்த பழையவர்கள் செய்வது சுமார் 70% என்றும் புதிய குற்றவாளிகள் 30% என்று புள்ளிவிவரம் சொல்கிறது. CCTV இருந்தும் அதில் பதிவான கொலை வீரர்களின் முகத்தை குற்றப்பின்னணி ஆவணத்தில் அலசிப் பார்ப்பதும் தாமாகிறது. Face recognition மென்பொருள் மூலம் கூட்டத்தில் முகத்தை சரிபார்த்து அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது என்றபோதும் குற்றவாளிகளைத் தேடுவது சிரமமாக இருக்கிறது. கொலையாளிகள் என்று சொல்வது மரியாதையில்லை என்று கருதும் சமுதாயத்தில் நாம் இருப்பதால், கண்ணியம் குறையாமல் அவர்களை ‘கொலைக்குற்ற வீரர்கள்’ என்று சொல்லிடுவோமே!
‘பல குற்றங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளி’ ‘தண்டனைப் பெற்ற முன்னாள் கைதி’ என்று அவர்களைப்பற்றி அறிமுகம் செய்யும்போது, தவறு சட்டத்திலும், மனித உரிமை ஆணையம் மீதும்தான் தெரிகிறது. குற்றத்தில் சிறிது/ பெரிது, மன்னிக்கப்படுவது / படாதது, இத்தனை வருடங்கள் இருந்தால் தண்டனை காலம் போதும், என்று பரிந்துரை செய்ய சட்டமும் அதை நிலைநாட்ட மனித உரிமை ஆணையமும் செயல்படுகிறது. நியாயப்படி நிரபராதிக்கு அநீதி இழைக்கபட்டால் அதற்கு ஆணையத்தின் தலையீடு வேண்டும்தான். ஆனால் பழையவர்கள் புதியவர்களுக்கு சிறையில் குருகுல பாடத்தையும் செயல்படும் ரகசியத்தையும் கற்பிப்பது ஆபத்தாக முடிகிறது. கோரிக்கை வைத்தால் குற்றவீரரின் பிறந்தநாள்களுக்குக்கூட விடுதலை செய்யும் அதிசய நிலை எதிர்காலத்தில் வரும்போல!
சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகள் மிகக்குறைவு. ஆனால் habitual crime record கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் கொலை/கொள்ளை குற்றங்கள் எழுகிறது என்றால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் அது நேர விரயம்தான். எங்கேனும் குற்றம் நடந்தால் பழைய குற்றவாளியை முதலில் தேடுவது வழக்கம். மூன்று முறைக்கு மேல் ஒருவர் தொடர் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர் என்றால் அவரை வேறு விதமாக கையாள வேண்டும். மீண்டும் மீண்டும் டெங்கு கொசு வளர அருமையான சூழலை உருவாக்கித் தந்தபின், ஊரெல்லாம் ஒரே காய்ச்சல் அதை மருத்துவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவதுபோல் உள்ளது.
பண பலம், ஆள் பலம், அரசியல் பின்னணி, என்று எல்லாமே கொலை வீரர்களை ஊக்கபடுத்தி வளர்த்து விடுவதால் காவலும்/சட்டமும் என்ன செய்ய முடியும்? ஐயோ பாவம்! பணிந்து போயாக வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதன் நடுவில் ‘அப்பாவி’ நிரபராதிகளான அந்த ‘ஏழு பேர்’ விடுதலைக் குறித்து நாடே கவலையில் உள்ளது. ஜேப்பிடி, நகைத் திருட்டு முதல் கற்பழிப்பு, கொலைவரை தண்டனைகள் பூப்போல இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதே தீவிர தண்டனைகலைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. மரண தண்டனை என்பது மனித உரிமை மீறல் என்றால் சித்தர்கள் உரைத்த வழியில் தாக்க வேண்டியதுதான்.
பெரியது கேட்கின் தர்மநெறி மக்களே
பெரிதுபெரிது இளமையில் திருட்டு
அதனின் பெரிது கற்பழிப்பும் கொலையும்
அதனினும் பெரிது மன்னித்தும் குற்றம் புரிதலே

No automatic alt text available.