About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 22 ஏப்ரல், 2017

வாத வித்தை

சரக்கு வைப்பு பற்றிய ஒரு பாடல் இங்கே... இதை சித்த வைத்திய நோக்கில் படிக்காது போனால் தவறான பொருள்தான் விளங்கும். ரசவாதம் கற்ற வேதியனுக்கு இந்த மறைப்புப் பாடல் வெளிப்படும்.
"பனங்கள்ளு தேடி வந்த வேதையனுக்கு தேன் கிட்டியது, அதை அளித்த பூமித்தாய்க்கு மஞ்சள் பூசிட, ஆண் பனை மரத்தின் அடியில் செருப்படி மூலிகை இருப்பது இவன் கண்ணுக்குத் தெரிய, பூமிக்கு கீழே இந்திரகோபம், ரத்தம், வெள்ளை போன்ற மூல/வைப்பு பாஷாணங்களும் அமுரியுப்பும் கொட்டிகிடப்பதை காண்கிறான். அண்டத்தில் இருப்பதுபோல் சரக்குகளிலும் பிண்டதேகத்திலும் ஐம்பூதங்கள் நிலைத்துள்ளது. உலோகங்களையும் பாஷாண சரக்குகளையும் வைத்து தக்கபடி உரைத்த உபசாரமுறைகள்படி அஷ்ட பாஷாணம், நவ பாஷாணம், தசபாஷாணமும் வேதித்துக் கட்டிட்டலாம்."

இதுதான் பாடலில் எனக்கு விளங்கிய பொருள். சித்த வைத்திய அகராதி துணையுடன் தெளிய பதவுரை எழுதினேன். இதைத்தாண்டி இன்னும்கூட நுட்பமான சங்கதி இப்பாடலில் சிலருக்கு வெளிப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக