About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 29 ஜூன், 2018

உச்சரிப்பு 'ஸ்பஷ்டம்'

வேதம் ஓதுவதில் வடக்கிந்திய வேதியர்களைவிட தென்னிந்திய வேதியர்களே சிறப்பாக உச்சரிப்பு செய்கிறார்கள். எல்லா பிராந்தியங்களிலும் முதல்கட்ட சங்கல்பம் அவரவர் மொழியில் விளக்கிவிட்டு பிறகு, முழு மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்வதுதான் பாரதம் முழுக்க வழக்கத்தில் உள்ளது.
நம்மைவிட அவர்களுக்குத்தான் உச்சரிப்பு வரும் என்று நாம் நினைப்போம், ஆனால் தென்னகத்தினர் குறிப்பாக தமிழ் வேதியர்கள் மட்டுமே வேத மந்திரகங்களை கனம் பாடுவதுபோல் சிரத்தையுடன் செய்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது தென்னகர்களுக்குத்தான் போல என்று அவர்கள் நினைப்பதும், வடமொழி நமக்கானதில்லை என்று நாம் நினைப்பதும் உண்டு. அப்படி என்றால் ஈசன் யாருக்காக இதைப் படைத்தான்? எப்படி இந்த அட்சர சுத்தம் தமிழ் வேதியர்களுக்கு வந்தது?
தமிழும் கூடுதலாக பேசுவதால், எந்த மொழியில் எந்த எழுத்தின் உச்சரிப்பும் நமக்கு வராமல் போகாது. இங்குதான் வடகிந்திய வேதியர்களின் ஓதும் திறன் குறைபடும். இரண்டு கண்களும் தெளிவாக இருந்தால்தானே பூரணத்துவம் கிடைக்கும்? அதுபோல்தான் நம் இருமொழிகளின் கலைகளும், சுவாசமும்.
இருமொழிகளும் படைக்கப்பட்டதன் உன்னத காரணமே இதற்குத்தான். ஆனால் துவேஷம் வெளிப்படுத்திக்கொண்டு சேற்றைவாரி வீசுவதை யாரும் உணர்ந்ததில்லை. அதனால்தான் சமஸ்கிருதம் என்ற மொழிக்கு எழுத்துவடிவம் இருந்தும் அதை அற்ப மனிதர்களுக்கு ஈசன் வெளிப்படுத்தவில்லை. அதை யாருக்குக் காட்டினான்?
அகத்தியர் திருமூலர் போகர் முதலான சித்த ரிஷிகளுக்கு அவனே கற்பித்து அருளினான். ஆனால் மனிதர்களுக்கு அதை காட்டாமல், சப்த மந்திரமே போதும் என்று விட்டுவிட்டான். இதனால்தான் சமஸ்கிருதத்தை அவரவர் மொழியில் இன்றுவரை எழுதி வருகிறோம். இன்னும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் அசோகர் காலத்து குப்பையைத் தோண்டினாலும் மூல வடிவம் புலப்படாது. குருடர்கள் யானையின் வடிவத்தைக் கண்டுக்கொண்டதைப் போலத்தான் அவரவர் போக்கில் மொழியைப் பற்றி விமர்சனம் எழும்.
இது போதாதென்று ஐரோப்பிய பாதிரிகள் ஆரியர்-திராவிடர் என்று ஒரு கற்பனைக் கதையை எடுத்துக்கொண்டுவந்து "நாங்கள் சொன்னபடி உங்கள் வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனான். ஆரியர் என்ற தனி இனம் கூரியரில் அயல் தேசத்தில்ருந்து வந்ததை இவன் பார்த்தானாம். ஆரியம் / ஆரியன் என்பதன் உண்மைப் பொருளை திருமந்திரம்/ திருவாசகம் உரைக்கிறது. சைவ சமய நூல்களை புறந்தள்ளி வெறும் தொல்லியல் வழியில் தேடினால் நூற்றாண்டுகளானாலும் ஏதும் கிடைக்காது. இத்தோடு லத்தீன், எபிரேயம், அராமி 'தொன் மொழிகள்' பதாகை வைத்துக்கொண்டு கோஷம் போடும்.
அப்படிப் பார்த்தால் வேத ஆரியரே தமிழர்தான்! எகிப்து, ரோம், சிரியா, மெக்சிகோ, சீனா, துவாரகையில் கிடைத்த அதே பானையோடு பிரம்மி எழுத்துக்கள்தான் கீழடியில் கிடைத்தது. ரிஷிப் பிரதேசமாம் ருஷ்யம்தான் ஆரிய வேதபூமி என்றால் அங்கும் அதே தமிழைத்தான் பேசினார்கள். இக்கூற்றை நம்மவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நாம் இன்றைக்கு தமிழ்ப் பேசி சம்ஸ்கிருத மந்திரமும் சொல்வதுபோல் தான் அன்றைக்கு அவர்களும் செய்தனர். பிற்பாடு பல மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்து, சொற்களை கடன்வாங்கி உலகம் முழுக்க எப்படியோ பரவி வளர்ந்தது, நான் பெரியவனா நீ பெரியவனா என்று மோதி நிற்கிறது. ஆரியர் எனப்படும் தமிழர்கள் எல்லோரும் ஆப்கானிஸ்தான், ரஷியா, ஈராக் தேசத்திலிருந்து இங்கே படையெடுத்து வந்திருந்தாலும் ஒரு தவறுமில்லை!
இங்கே மூவேந்தர்கள் போரிடலாம், கங்கையைத் தாண்டி இமயம்வரை சென்று வெற்றிக் கொடி நடலாம். இவன் அவனுடைய ராஜ்ஜியத்தை பேராசைக்கொண்டு அபகரிக்கலாம். ஆனால் ஆரிய தேசத்து தமிழன் இங்கே வந்து படை எடுத்தால் அது ஆரிய படையெடுப்பாம். தமிழனுக்கும் வேதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று இருந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். சப்த சாகரங்களைக் கடந்து போய் போகர் பலகாலங்கள் அங்கெல்லாம் தங்கி நாகரிகத்தையும் வழிபாடு / பஞ்சாங்க நெறிகளையும் முறைப்படுத்தியவர். நான் சொல்வது பலருக்கு வியப்பாக இருக்கும். கோபம்கூட வரும். மொழி சச்சரவுகள் தீரும்வரை சமஸ்கிருத 'தேவமொழி' வடிவம் மனித கண்களுக்குப் புலப்படாமல் இருக்கட்டும்.

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக