About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாபர் முதல் டாபர் வரை

நான் பள்ளி மெட்ரிகுலேஷன் படிக்கும்போது வரலாறு பாடத்தை ஆழ்ந்து படிக்காமல் தேர்ச்சிபெற வேண்டும் என்ற அளவில்தான் படித்தேன். எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் Dr.Eswari Prasad அவர்களின் History Of Medieval India from 1526 AD to 1947. இது சற்றும் எனக்கு இலயிக்கவில்லை.

அப்புத்தகத்தில் முந்தய மன்னர்கள் கதையில் மௌரியர், குப்தர் அறிமுகம் தந்த பின், முகலாயர் பிரதாபம் விளக்கி அவன் இவன் என பொழுதுபோகாத வடநாட்டு அரச வம்ச கதைகளும், அவனுடைய மற்ற மனைவியரின் குழந்தைகள் யார், சூழ்ச்சிகள் செய்தது, போர் தொடுத்தது, யாரை யார் அடித்துக்கொண்டு இறந்தது என்று மனப்பாடம் செய்ய வேண்டி இருந்தது. சத்ரபதி சிவாஜி கதையும் அப்படித்தான். அவனுடைய சிற்றன்னையின் மகன்களின் கதை தஞ்சாவூர்வரை வந்து சேரவே கொஞ்சம் சுவாரசியம் ஓங்கியது. வகுப்புத்தேர்வில் ஒரு வினாவுக்கு 'Shajahan killed Kanjan khan' என்று வேண்டுமென்று எழுதினேன். 'கஞ்சன் இல்லை கான்ஜஹான்' என்று என் ஆசிரியர் திருத்திவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். இப்படி அந்த முகலாயர்கள் என் வெறுப்பை சம்பாதித்தனர். முகலாயர்கள் பட்டியலில் Babur, Dabur என்று எதுகை மோனை குறையாமல் சேர்த்து விடுவேன்.

தமிழ் உரைநடை நூலில்தான் மூவேந்தர்கள் பற்றிய பாடம் வரும். வரலாறு போல் இதில் முகலாயர் வரமாட்டார்கள். ஏனோ, எனக்கு பல்லவ சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுதான் பிடித்திருந்தது. அதுபோக திப்பு சுல்தான் பிடிக்கும். ஆங்கிலேயர் வரலாறு முகலாயர்போல் சோர்வைத் தரவில்லை. நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே பாரம்பரிய தலங்கள், புகைப்படங்கள் எடுப்பது, அகழ்வாராய்ச்சி, சுவடிகள் சேகரிப்பது போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. அதுவும் தென்னகம் சார்ந்த சங்கதியாக இருக்கும் வரைதான். இன்னும் என்னுடைய பத்தாம் வகுப்பு வரலாறு புத்தகத்தை டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது முழுதுமாகப் படிக்கத்தான்! ஹிஹிஹ்ஹி.


No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக