About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 11 ஆகஸ்ட், 2018

வேடம் தரித்து...

'தமிழ்த்தாய்' என்று பிரத்தேயகமாக ஒரு சிலையை பலகாலமாகப் போற்றி வணங்குவதும், அதைச் சார்ந்து சர்ச்சைகள் எழுப்புவதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. திராவிட அரசியலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தாய், ஏன் இறை அம்சம் பெற்றவளாகக் காட்டப்படவில்லை? அவளை நாடகத்தில் வேடம் கட்டும் பெண்போல் சித்தரித்ததே உண்மை. நம் ஆசாமிகளைப் பார்த்து அண்டை மாநிலங்களும் கெட்டன. அவர்களும் இதேபோல் காப்பி அடித்து ஆளுக்கொரு தாயை உருவாக்கி வைத்துள்ளனர்.
மொழி என்பது சிவனிடமிருந்து வெளிப்பட்டது. சிவனின் வாசிக்கால் சப்தமே அக்கலைகள். அந்த மொழியை சக்தியின் வடிவாக வழிபடுவது ஆதிகாலம் முதலே மரபு. திருமுறைகளில் தேவி என்ன பெயர்களால் பாடப்பட்டுள்ளாள்? தேன்மொழி அம்மை, மதுரபாஷினி, வாக்குதேவி, ஒசைக்கொடுத்த நாயகி, பன்மொழி அம்மை, மந்திரநலத்தாள், பண்ணுறை நாயகி, இப்படி பல திருப்பெயர்களால் அவள் அழைக்கப்படுகிறாள். சிவசக்தி பெண்மையின் வடிவெய்தி தேசம், நதிகள், மலைகள், என எல்லாமுமாக இருக்கிறாள். 
முப்பெரும்தேவியரின் கைகளிலுள்ள ஆயுதங்கள் ஏன் இவள் கைகளில் வெளிப்படவில்லை? தெய்வீக அடையாளங்கள் வெளிப்படாமல் திராவிடத் தலைவர்கள் சிருஷ்டித்தனர். அவளை சக்தியின் வடிவாக சித்தரித்ததே திராவிட கொள்கைக்கு எதிரானது. இன்னும் எதற்கு கேலிக்காக ஒரு மொழித்தாய்?

Image may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக