About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இயேசு கிறிஸ்து - விஸ்வகர்ம ஆச்சாரி

கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்துப் பரப்பிய இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வகர்மா என அறிஞர் எம். எஸ். இராமசாமி ஐயர் பல ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.
அவர் 1936ம் ஆண்டு ஆனி மாதம் நடைபெற்ற ஆசிரியர்கள் கழக மகாநாட்டில் பின்வரும் தலைப்புக்களில் இதை வலியுறுத்தியுள்ளார்.
(1) Christ is not a Greek but an Indian.
(கிறிஸ்து கிரேக்கரல்ல, இந்தியனே!)
(2) Was Tamil the mother tourge of Jesus Christ?
(இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழா?)
(3) Was Jesus Christ a Viswakarma Brahmana?
(இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வ பிராமணனா?)
இந்த ஆய்வுக்கட்டுரைகளை அவர் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ பல்கலைக்கழதிற்கு அனுப்பியுள்ளார். அவர் தனது ஆய்வுக்கு ஆதாரமாக புனித பைபிளில் இருந்து ஆதாரங்கள் காட்டியுள்ளார். இயேசு கிறிஸ்து, ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். அவரும் தந்தையுடன் சேர்ந்து தச்சுத்தொழில் செய்துள்ளார். அந்தவகை யில் அவர் ஒரு விஸ்வகர்மாவாகும். ஜீசஸ் அல்லது 'ஜெசுவா' என்பது 'கேசவா' என்பதன் மருவு ஆகும். "Isn’t this the carpenter, the son of Mary?" (Mark 6:3) என்று பைபிள் சொல்கிறது.
அவர் குலத்தால் விஸ்வகர்மாவாகும். விஸ்வகர்ம மக்களே ஆரம்பத்தில் மதங்களோடு மிகத் தொடர்புடையவர்களாக இருந்தவர்கள். இந்து, இஸ்லாம், பெளத்த மதங்களை ஆரம்பித்தவர்கட்கும், விஸ்வகர்ம மக்களுக்கும் தொடர்புண்டு. அவர்கள் படைப்புக் கடவுளான உலக முதல்வன் விஸ்வகர்மாவின் பரம்பரையினர் பிறப்பால் தெய்வ சம்பந்தமுடையவர்கள். உலக நாகரிகங்களை வித்திட்ட மக்கள் அனைவரும் கட்டிடக்கலையைத் தங்கள் தொழிலாகவும், சர்ப்ப, சூரிய வழி பாட்டைத் தங்கள் குலவழிபாடாகவும் கொண்டவர்கள். இன்று விஸ்வகர்மா ஆச்சாரி என்ற பெயர் கொள்ளாமல் வேறு மதங்களில் இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழ். அவருடைய தாய் மேரி என்பது மரியம் (மாரியம்மை) என்பதன் மருவுவாகும். அவரின் சகோதரியின் பெயர் (Tamfr) தமர். தாமரை என்ற சொல்லே தமர் என மருவியது. அதுபோல் பள்ளிஸ்தானம் என்பதே பாலஸ்தீனமாக மாறியுள்ளது. இயேசுவின் நிறம்"மெட்ராஸ் கலர்" என பைபிளில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்தியரே ஆவார், அவரின் குலத்தொழில் தச்சுவேலை . அகஸ்தியர், போகர் போன்ற மூத்த சித்தர்களிடம் அஷ்டசித்து பயின்று வெளிதேசம் போனார். 12-30 வயது வரையான 18 வருடங்கள் இங்கு சித்தர்களிடம் பயின்றார். அனேக சித்து வேலைகள் செய்து காட்டியும், சமாதியிலிருந்து உயிர்த்து எழணும் என்றால் அவர் சித்தராகத்தானே இருக்க முடியும்? இயேசுவை சித்தர் என்றால் கிறித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். போகர் பின் எதற்காக அன்னை  மரியாளின் பாதம் தொட்டு வணங்கவேண்டும்? இயேசு சமாதியில் இருப்பதை கண்டுவிட்டு ஜெருசலேம் நகரத்தை விட்டு மக்க தேசம் போகிறார். இவை போகர்-7000 நூலில் உள்ளது.


விஸ்வகர்ம மாயன் இனம் பரந்துபட்டு போனதால், காலப்போக்கில் உலகெங்கும் இந்த இனம் மாறிபோய் வேறு மதம் தழுவி, விஸ்வகர்மாவுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் 'ஆச்சாரிகள் அப்போவே எப்படி அங்கு போயிருக்கமுடியும்?' என்ற எண்ணம் வரும். ஆனால், இதன் அடித்தளம் ஒன்றே. 
பிரபஞ்சம் தோன்றிட ஈசன் உருவாக்கிய ஐந்தொழிலான இவற்றை இன்று எல்லோருமே கல்வி-பணி நிமித்தமாய் செய்து வருகிறார்கள். இதன்படி பார்த்தால் அவர்கள் விஸ்வக்ர்மாவாக இருக்கணும் என்று அவசியமில்லை. சுமார் கிபி.52 முன்பு இந்தியாவுக்கு St.Thomas தச்சு வேலை செய்யவும் கிறிஸ்து பிரசாரம் செய்யவுமே மைலாபூருக்கு வந்து தங்கினார்.
இன்று விஸ்வகர்மா சமூகத்திலேயே, பாட்டன் காலத்தில் தச்சு வேலை செய்தவர் இன்று பட்டறை, நகை கடை வைத்தோ, ஸ்தபதியாகவோ; வேறு துறைக்கு போகவும்கூட நிறைய சாத்தியங்கள் உண்டு. வேறு கோத்ர சம்பந்தம், கலப்பு மணம், போன்று பல காரணங்கள் இருக்கு. ஆக, இந்தியாவில் இந்த சமூகத்திலேயே இத்தனை மாற்றங்கள் வந்துள்ளபோது, வெளிநாட்டிலும் வந்திருக்கும். அடித்தளம் தெரியாமல் பார்க்கும்போது, இது நமக்கு சந்தேகத்தைத் தரும். ஆய்வில் பல விஷயங்கள் வரும்!

Image may contain: 3 people, text

வெவ்வேறு சமயங்களாக இருப்பினும் கிருஷ்ணருக்கும் கிறிஸ்துவுக்கும் பல கதாபாத்திர ஒற்றுமையைக் காண்கிறேன். இருவருமே பல வர்ணங்களின் பணிகளைச் செய்தவர்கள். இரண்டு பெயர்களுக்கும் கிரேக மொழியில் 'ஈர்க்கும் அழகுள்ள நீலம்' என்ற பொருளுண்டு. இருவருமே ஆயுதத்தால் குத்தி இறந்தார்கள். இப்பதிவைப் பார்த்து வெகுண்டு எழுவோரும் உண்டு... சர்வம் பரபிரம்மம்!

ஆக, ஒருவருக்கு ஜாதி என்பது ஏற்று செய்யும் பணியால்தான் வருகிறது, பிறப்பால் அல்ல. காலப்போக்கில் அச்சந்ததியினர் அதை தொடர்ந்து செய்வதால், அது ஒரு குலமாகவும், அது செய்யும் வேலையையும் காட்டி நிலைத்து விடுகிறது. அப்படி என்றால் ஏசு என்ன குலத்தில் வருகிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக